Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உபி வழக்கில் முகமது ஜுபைரின் ஜாமினை நீட்டித்த உச்சநீதிமன்றம்.. ஆனாலும் சிறையில் தான் இருக்கனும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேச மாநில போலீசார் பதிவு செய்த வழக்கில் ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைரின் இடைக்கால ஜாமினை இன்று நீட்டிப்பு செய்த உச்சநீதிமன்றம் 4 வாரத்துக்குள் வழக்கு தொடர்பாக பதிலளிக்ககோரி அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

‛ஆல்ட் நியூஸ்' எனும் ‛பேக்ட் செக்' இணையதளத்தில் இணை நிறுவனர் முகமது ஜுபைர். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.

மேலும் வலதுசாரிகள் பரப்பும் செய்திகளின் உண்மை தன்மையை கண்டறிந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

முகமது ஜுபைர் கைது

முகமது ஜுபைர் கைது

இந்நிலையில் கடந்த ஜூன் 27 ம் தேதி முகமது ஜுபைரை டெல்லி போலீசார் கைது செய்தனர். 2018 ல் டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்து மத உணர்வை புண்படுத்தியாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் வழக்கு பதிவு

உத்தர பிரதேசத்தில் வழக்கு பதிவு

இதற்கிடையே தான் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முகமது ஜுபைர் மீது உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் போலீசார் மற்றொரு வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். ஜூலை 4ம் தேதி முகமது ஜூபைர் வழக்கு தொடர்பாக சீதாபூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சீதாபூர் போலீசார் பதிவு செய்த வழக்கில் கடந்த 8ம் தேதி அவருக்கு உச்சநீதிமன்றம் 5 நாள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும் டுவிட்டரில் கருத்து பதிவிடக்கூடாது என நிபந்தனை விதித்தது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

இந்நிலையில் சீதாபூர் போலீசார் பதிவு செய்த வழக்கில் ஜாமின் கோரி முகமது ஜூபைர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். இதனை கடந்த 8ம் தேதி இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்ததை எதிர்க்கும் முகமது ஜுபைர் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. அதோடு டுவிட்டரில் கருத்து பதிவிடக்கூடாது என நிபந்தனை விதித்தது. மேலும், இந்த உத்தரவு டெல்லி போலீசாரின் வழக்குக்கு பொருந்தாது என கூறப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

இடைக்கால ஜாமின் நீட்டிப்பு

இடைக்கால ஜாமின் நீட்டிப்பு

அப்போது வழக்கில் பதிலளிக்கவும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் 4 வாரம் அவகாசம் தரும்படி உத்தர பிரதேச மாநில அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் அடுத்த உத்தரவு வரும்வரை சீதாபூர் வழக்கில் முகமது ஜுபைரின் இடைக்கால ஜாமினை நீதிமன்றம் நீட்டிப்பு செய்தது. மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறையில் தான் இருக்கனும்

சிறையில் தான் இருக்கனும்

முன்னதாக மத உணர்வை தூண்டியதாக கடந்த ஜூன் 27 ம் தேதி முகமது ஜுபைரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி முகமது ஜுபைர் சார்பில் டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூலை 14ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஒத்திவைத்தது. இந்த வழக்கில் முகமது ஜுபைருக்கு இன்னும் ஜாமின் கிடைக்காததால் அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+