வலிமையான,வளமான மாநிலத்தை உருவாக்க திமுகவுடன் தொடர்ந்து செயல்படுவோம் - ராகுல் ட்வீட்
தமிழ் மக்களுக்கென வலிமையான, வளமான மாநிலத்தை உருவாக்க தி.மு.கவுடன் தொடர்ந்து செயல்படுவோம் என ராகுல்காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி: தமிழ் மக்களுக்கென வலிமையான, வளமான மாநிலத்தை உருவாக்க திமுக உடன் தொடர்ந்து செயல்படுவோம் என்று மு.க ஸ்டாலின் உடனான சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாட்கள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்த அவர், மாலையில் மோடியை சந்தித்து 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இந்த சந்திப்பு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்ததாக கூறிய மு.க ஸ்டாலின், உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று கூறினார்.

நேற்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த முதல்வர், இன்று காலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது
சோனியா காந்திக்கு ஜர்னி ஆஃப் எ சிவிலைசேஷன்: இண்டஸ் டு வைகை (Journey of a civilaization indus to vaigai) என்ற புத்தகத்தை பரிசளித்தார். இந்தப் புத்தகம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் ஒடிசா மாநில அரசின் ஆலோசகரும், சிந்து சமவெளி பண்பாட்டு ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணனின் எழுதியதாகும்.

மு.க ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல்காந்தி உடனான சந்திப்பின் போது ஏராளமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இந்த புகைப்படங்களை இந்திய காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, "தமிழ் மக்களுக்கென வலிமையான, வளமான மாநிலத்தை உருவாக்க தி.மு.கவுடன் தொடர்ந்து செயல்படுவோம்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications