டெல்லியில் 10,000 படுக்கைகளுடன் உலகின் மிக பெரிய கொரோனா தனிமைப்படுத்துதல் மையம்
டெல்லி: டெல்லியில் 10,000 படுக்கைகளுடன் உலகின் மிக பெரிய கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தை உருவாக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மையத்துக்கு 20 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சார வசதி கொடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்து வருகிறது. டெல்லியில் கொரோனா மரணங்களும் அதிகரித்திருக்கின்றன.

மிகப் பெரிய தனிமைப்படுத்துதல் முகாம்
இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தெற்கு டெல்லியில் ராதா சோமி ஆன்மீக மையத்தில் 10,000 படுக்கைகளுடன் கூடிய கொரோனா தனிமைப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதான் உலகின் மிகப் பெரிய குவாரண்டைன் முகாம்.

12,50,000 சதுர அடியில் முகாம்
மொத்தம் 22 கால்பந்து மைதானங்களின் அளவில் இந்த உலகின் மிக பிரமாண்டமான கொரோனா தடுப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 12,50,000 சதுர அடி கொண்டதாக இந்த தடுப்பு முகாம் அமைகிறது. தற்போது இந்த தடுப்பு முகாமுக்கு மின்சார வசதிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

20 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சாரம்
22 கி.மீ தொலைவுக்கு தரைக்கு கீழே கேபிள்கள் பதிக்கப்பட்டு 20 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சாரம் வழங்கும் பணி மேற்கொள்ளபட்டு வருகிறது. 15 நாட்களிலேயே இந்த தடுப்பு முகாமுக்கான முழு அளவிலான மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான பணியில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் ஏற்பாடு
இந்த டிரான்ஸ்பார்மர்கள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டவை. ஆயில் மூலம் செயல்படாதவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டிரான்ஸ்பார்மரும் 1,000 கிலோவாட் மின்சாரம் சக்தி கொண்டதாக இருக்கும். அனைத்து ஏற்பாடுகளும் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications