சவுதியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை தாக்கிய ஈரான்.. இந்த முறை சேதம் கொஞ்சம் அதிகம்!
துபாய்: சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான, பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை ஈரான் தாக்கியிருக்கிறது. இந்த தாக்குதலில் சுமார் 10 அமெரிக்க வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலை விட, இந்த தாக்குதல் கொஞ்சம் அதிரடியாகவே இருந்திருக்கிறது. மட்டுமல்லாது, போர் தொடங்கியதிலிருந்து இந்த விமானப்படைத் தளம் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சி.பி.எஸ். நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காயமும் உயிரிழப்பும்
காயமடைந்தவர்களில் இருவர் மிகக் கடுமையாகவும், 8 பேர் தீவிர காயங்களுடனும் இருப்பதாக அமெரிக்கப் படை தெரிவித்தது. அமெரிக்கா-ஈரான் மோதலில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட படை வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலானோர் பணிக்குத் திரும்பிவிட்டனர். 13 பேர் உயிர் நீத்துள்ளனர்.
தரைப்படைகளை அனுப்பும் அமெரிக்கா
இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரானுக்கு எதிரான போரில் தரைப்படைகள் இல்லாமல் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும் என்றார். ஆனால், மோதலுக்கு மத்தியில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்தாலும், மேற்கு ஆசியாவிற்கு கூடுதல் படைகளை அனுப்ப அமெரிக்கா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
மார்கோ ரூபியோ சொன்னது என்ன?
ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரூபியோ, ஈரான் அணு ஆயுதங்களைத் தடுக்கும் வகையில் அதன் அனைத்து இராணுவத் திறன்களையும் அமெரிக்கா அழிக்கும் என்றார். "கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணை ஏவுதளங்களைப் பெரிய அளவில் அழிப்போம், இதனால் அவர்கள் அணு ஆயுதத்தைப் பெற முடியாது. இலக்குகளை அடைந்து வருகிறோம். காலக்கெடுவை விட முன்னதாகவே செல்கிறோம், தரைப்படைகள் இல்லாமல் இதை அடைய முடியும்" என்று கூறியிருக்கிறர்.
போர் எப்போது முடியும்?
இப்போர் மாதக்கணக்கில் நீடிப்பதற்குப் பதிலாக சில வாரங்களிலேயே முடிந்துவிடும் என்றும் ரூபியோ நம்பிக்கை தெரிவித்தார். ரூபியோவின் இக்கூற்று, மேற்கு ஆசியாவில் 1,000க்கும் மேற்பட்ட வீரர்களை அமெரிக்கா பணியமர்த்தும் என்ற செய்திகளுக்குப் சில நாட்களுக்குப் பின்னரே வந்தது.
அமெரிக்காவின் வியூகம்
சிஎன்என், இரு ஆதாரங்களை மேற்கோள்காட்டி, அமெரிக்க இராணுவத்தின் 82வது ஏர்போர்ன் பிரிவின் துருப்புகள் விரைவில் அங்கு அனுப்பப்பட உள்ளதாகக் குறிப்பிட்டது. 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்', அமெரிக்கப் போர் மந்திரிசபை அதிகாரியை மேற்கோள்காட்டி, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்தாலும், 82வது ஏர்போர்ன் பிரிவு தவிர்த்து, காலாட்படை மற்றும் கவச வாகனங்கள் உட்பட 10,000 கூடுதல் தரைப்படைகளை மேற்கு ஆசியாவுக்கு அனுப்ப அமெரிக்கா பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளது.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை!












Click it and Unblock the Notifications