ஈரோடு கிழக்கு தொகுதி: முதல் ஆளாக வந்த தேர்தல் மன்னன் பத்மராஜன்.. 233-வது முறையாக வேட்பு மனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் மன்னன் பத்மராஜன் முதல் ஆளாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே அதிக தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
ஒரு தொகுதி காலியாக இருந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

10-ந்தேதி கடைசி தேதி
இதனால், தமிழக அரசியல் கட்சிகளின் மொத்த பார்வையும் ஈரோடு கிழக்கு தொகுதி பக்கம் திரும்பியது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தினமும் காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய ஃபிப்ரவரி மாதம் 7-ந்தேதி கடைசி நாளாகும். 8-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஃபிப்ரவரி மாதம் 10-ந் தேதி கடைசி நாள் ஆகும் வேட்பாளர்களில் பொது பிரிவினர் டெபாசிட் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினர் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

4 பேர் மட்டுமே வரவேண்டும்
வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும். 3 கார்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவுக்கு முன்பே கார்களை நிறுத்திவிட வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

முதல் ஆளாக வந்த பத்மராஜன்
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாளே தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய வருகை தந்தார். குடியரசுத்தலைவர் தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வேட்பு மனுவை தாக்கல் செய்து வரக்கூடியவர் பத்மராஜன். இது தொடர்பாக பத்மராஜன் கூறுகையில், "1988-ல் இருந்து தொடங்கி இதுவரை 233 வது தேர்தலை சந்திக்கிறேன். கடசியாக குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டேன். டெபாசிட் தொகைக்காக மட்டும் சுமார் 1 கோடி ரூபாய் செலவு செய்துள்ளேன்" என்றார்.

பஞ்சர் கடை வைத்துள்ளேன்
தொடர்ந்து அவர் கூறுகையில், சேலம் மாவட்டம் மேட்டூர் எனது சொந்த ஊராகும். பஞ்சர் கடை வைத்துள்ளேன். முதல் முதலாக 1988-ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன் அதன்பிறகு அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறேன். இதுவரை 32 எம்.பி. தேர்தல்கள், 6 குடியரசு தலைவர் தேர்தல்கள், 6 துணை குடியரசு தலைவர் தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்கள், கவுன்சிலர் தேர்தல்கள் பஞ்சாயத்து யூனியன் தேர்தல்கள் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ளேன்.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றேன்
தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் எனது நண்பர்கள் உறவினர்கள் கிண்டலடித்தனர். அதிக தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன் இதற்காக 233 தடவையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

10 ரூபாய் நாணயங்கள்
அதேபோல், டெபாசிட் தொகையாக வெறும் நாணயங்களை மட்டுமே செலுத்துவதற்காக காந்தி ரமேஷ் என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தார். கையில் தராசுடன் வருகை தந்திருந்த ரமெஷ் 100 சதவீத வாக்கு பதிவு செலுத்தப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காகவும் 10 ரூபாய் நாணயங்களை பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications