தொழில் அதிபரான அர்ஜூனின் 2-வது மகள்.. யாருமே செய்ய முடியாத ஹேண்ட்பேக் பிசினஸ்.. அடேங்கப்பா சூப்பர்!
ஹைதராபாத்: நடிகர் அர்ஜூனின் முதல் மகள் ஐஸ்வர்யா சினிமாவில் நடித்து வரும் நிலையில், 2-வது மகள் அஞ்சனா யாருமே செய்ய முடியாத பழ தோல்களால் ஹேண்ட் பேக் செய்யும் பிசினஸ் செய்து புதிய தொழில் அதிபராக மாறியுள்ளார்.
ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜூன் 1990 களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார்.
தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் அர்ஜுன்
தற்போதும் வில்லன், குணச்சித்திர வேடம் என பிஸியாகவே அர்ஜூன் இருக்கிறார். அர்ஜூன் கடந்த 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகையாக உள்ளார். தமிழில் விஷாலுடன் பட்டத்து யானை படத்தில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஹேண்ட் பேக்குகள் தயாரிக்கும் நிறுவனம்
அர்ஜூனின் இளைய மகளான அஞ்சனா சினிமாவில் நடிப்பாரா? என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சினிமா பக்கம் தலைகாட்டாத அஞ்சனா, தொழிலதிபராக வேண்டும் என்றே ஆசைப்பட்டதாக தெரிகிறது. தனது விருப்பப்படியே அஞ்சனா தொழில் அதிபராகியிருக்கிறார். ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனத்தை அஞ்சனா தொடங்கியுள்ளார்.

பழ தோல்களால் தயார் செய்யப்படுகிறது
தெலுங்கானா மாநிலம் ஐதரபாத்தில் இந்த நிறுவனத்தி தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். ஹேண்ட் பேக்குகள் என்றால் சாதாரணமாக தோல் பொருட்கள் மற்றும் இதர ரப்பர் போன்ற பொருட்களின் செய்யப்படும் என்று நினைத்துவிடக்கூடாது. இதில் தான் சிறப்பம்சம் உள்ளது. ஏனென்றால், அஞ்சனாவின் நிறுவனத்தின் தயாரிக்கப்படும் ஹேண்ட்பேக்குகள் முழுக்க முழுக்க பழ தோல்களை கொண்டு தயார் செய்யப்படுவதாகும்.

வலுவானதாக இருக்கும்
முழுவதும் பழ தோல்களை கொண்டு உருவாக்கப்படும் இந்த பேக்குகள், பிற பேக்குகளை போன்று பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் வலுவானதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சார்ஜா என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் தொடக்க விழா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குனர் விஜய ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications