நான் 3 அடி உயரம்தான்... டிரைவிங் லைசென்ஸ் வாங்கிட்டேன்... தெலுங்கானாவில் ருசிகரம்....
ஐதராபாத் : இந்தியாவிலேயே முதல் முறையாக 3 அடி உயரம் கொண்ட ஒருவருக்கு வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
42 வயதான 3 அடி உயரம் கொண்ட நருக்கு லைசென்ஸ் கிடைத்திருப்பது தெலுங்கு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
3 அடி உயரமே என்றாலும் தன்னுடைய உயரத்திற்கேற்ப காரில் சில மாற்றங்களை செய்து ஓட்டக் கற்றுக்கொண்டார் ஷிவ்லால்.

மூன்று அடி உயர மனிதர்
தெலுங்கானா மாநிலம் குகத்பள்ளியில் வசித்து வருபவர் ஷிவ்லால். இவருக்கு 42 வயது ஆகிறது. ஆனால் இதுவரை கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வாங்கவில்லை. வாங்கவில்லை என்பதை விட அரசாங்கம் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். அதற்குக் காரணம் அவரது உயரம் 3 அடி மட்டுமே. 3 அடி உயரம் கொண்ட எவராலும் காரை ஓட்ட முடியாது என்பதால், அவரால் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள முடியவில்லை. கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெறவும் முடியவில்லை.

காரை ஓட்ட பழகினார்
சாலைகளில் வாகனம் ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஷிவ்லாலுக்கு இருந்தது. ஆனால் இவரது உயரத்தை பார்ப்பவர்கள் இவருக்கு கார் ஓட்ட சொல்லித் தருவதற்கு தயங்கி வந்தனர். ஆனால் இவரது ஆர்வத்தை கண்டுகொண்ட தனியார் டிரைவிங் ஸ்கூல் ஒன்று இவருக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்தது. இவருடைய காரில் சில மாற்றங்கள் செய்து கார் ஓட்டக் கற்றுக்கொடுத்துள்ளது. கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது நிறைய சிரமங்களை அனுபவித்தார் ஷிவ்லால். ஆனாலும் யூடியுப்பிலும் கார் ஓட்டுவது குறித்து கற்றுக்கொண்டார். உயரம் குறைவாக இருந்தாலும் மிகக் குறுகிய காலத்தில் டிரைவிங் கற்றுக் கொண்டார்.

ஓட்டுநர் உரிமம் வாங்கினார்
பின்னர் அவருக்கு வழக்கமான தேர்வுகளை வைத்த போக்குவரத்து அதிகாரிகள், அவர் கார் ஓட்டுவதை பார்த்து திருப்தி அடைந்தனர். பின்னர் அவருக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். நாட்டிலேயே முதன் முறையாக 3 அடி உயரம் கொண்டவர் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றவர் என்ற பெருமை ஷிவ்வாலுக்கு கிடைத்து உள்ளது. தற்போது இவர் மற்றவர்களுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்து வருகிறார். மேலும் இவரே தனியாக ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சாதனையாளர் பட்டியலில் இடம்
இவரது முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இது மட்டுமின்றி மூன்று அடி உயரமுள்ளவர் நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர் என்ற அடிப்படையில் அவருக்கு தெலுங்கு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனையாளர் பட்டியலில் இணைந்துள்ளார். அமெரிக்காவில் 3 அடி உயரம் கொண்டவர் கார் ஓட்டுவது இவருக்கு இன்ஸ்பிரஷனாக அமைந்தாக தெரிவித்தார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications