ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. பெற்றோரை அலைய விட்ட 3 போலீசார்.. அதிரடியாக சஸ்பெண்ட்!
ஹைதராபாத்தில் மருத்துவர் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கை பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த போலீசார் மூன்று பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மருத்துவர் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கை பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த போலீசார் மூன்று பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த 26 நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் அதன்பின் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் வழக்கு
இந்த வழக்கில் போலீசார் தொடக்கத்தில் மிகவும் மெத்தனமாக செயல்பட்டு இருக்கிறார்கள். அந்த பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த புகாரை போலீசார் முதலில் எடுக்கவில்லை. 24 மணி நேரமாக பெற்றோர்கள் முயன்று போலீசார் புகாரை எடுக்கவில்லை.

பெண்ணின் உடல்
அந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்தான் போலீசார் புகாரை எடுத்து இருக்கிறார்கள். அதுவரை, அந்த பெண் ஓடி போய் இருப்பார் என்று கூறி பெற்றோரரை அவமானப்படுத்தி உள்ளனர். முக்கியமாக சம்ஷாத் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் எம் ரவி குமார் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் வேணுகோபால் ரரெட்டி, சத்யநாராயண கவுடா ஆகியோர்தான் இப்படி செய்துள்ளனர்.

மக்கள் போராட்டம்
இவர்களுக்கு எதிராக மக்கள் கடந்த இரண்டு நாட்களாக போராடி வந்தனர். பெண்கள் அமைப்பை சேர்ந்த பலர் இதற்கு எதிராக போராடி வந்தனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த போலீசாருக்கு எதிராக கடுமையாக ககோஷங்கள் எழுப்பப்பட்டது.

நீக்கம்
இந்த நிலையில் சைபெராபாத் போலீஸ் கமிஷனர் விசி சஜ்னார் தற்போது அதிரடியாக இவர்கள் மூவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார். இவர்கள் மீது விசாரணை நடத்தி விரைவில் முடிவு எடுக்கப்படும். இவர்களின் செயல்பாடு மிகவும் தவறானது என்று கமிஷனர் சஜ்னார் குறிப்பிட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications