கருக்கலைப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்த 10 வயது சிறுமிக்கு பிறந்தது பெண் குழந்தை
கருக்கலைப்பு செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
சண்டிகர்: பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பம் தரித்த 10 வயது சிறுமியின் கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது. அந்தச் சிறுமிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்துள்ளது.
சண்டீகரில் 10 வயது சிறுமி அவரது உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அச்சிறுமி கருவுற்றார். இந்நிலையில் சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சண்டீகர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் சண்டீகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையிடம் அறிக்கை கேட்டது. மருத்துவமனை அளித்த அறிக்கையின் படி, மருத்துவ அறிக்கையில் கருவைக் கலைப்பதால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து நேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி கருவைக் கலைக்க அனுமதி மறுத்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், கருவைக் கலைக்காமல் இருந்த சிறுமிக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று காலை 2.2 கிகி எடை கொண்ட பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தைக்கும் சிறுமிக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் மற்றும் சேய் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தசாரி ஹரிஷ் கூறியுள்ளார்.
சிறுமியின் வயிற்றில் கட்டி இருப்பதாகக் கூறியே சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தனக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்பது தெரியாமல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் அவரது பெற்றோர்கள் இருந்து கவனித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications