காஷ்மீரில் பயங்கரம்.. நூறு அடி பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்.. 11 பேர் பலி; பலர் கவலைக்கிடம்
பூஞ்ச்: காஷ்மீரில் நூறு அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பனிமூட்டம் அடர்ந்து காணப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சயுஜியான் பகுதியில் இருந்து மண்டி நோக்கி இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 20 பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில், பரேரி நல்லா மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த நூறு அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராணுவத்தினருக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில், அங்கு வந்த ராணுவத்தினர், மலைப்பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கி காயமடைந்தவர்களை மீட்டனர். இவர்களில் 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பனிமூட்டம் அதிகமாக இருந்ததே இந்த விபத்து ஏற்பட காரணம் எனத் தெரியவந்தது.
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications