காஷ்மீரில் பயங்கரம்.. நூறு அடி பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்.. 11 பேர் பலி; பலர் கவலைக்கிடம்
பூஞ்ச்: காஷ்மீரில் நூறு அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பனிமூட்டம் அடர்ந்து காணப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சயுஜியான் பகுதியில் இருந்து மண்டி நோக்கி இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 20 பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில், பரேரி நல்லா மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த நூறு அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராணுவத்தினருக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில், அங்கு வந்த ராணுவத்தினர், மலைப்பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கி காயமடைந்தவர்களை மீட்டனர். இவர்களில் 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பனிமூட்டம் அதிகமாக இருந்ததே இந்த விபத்து ஏற்பட காரணம் எனத் தெரியவந்தது.
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications