கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் விறுவிறுப்பு- 75% வாக்குகள் பதிவு!!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 4.30 மணிவரை சுமார் 75% வாக்குகள் பதிவாகி இருந்தன.
கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கொல்லம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

இத்தேர்தலில் 31,161 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 1,11,11,006 வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய பிரதான கட்சிகளுடன் ஈழவா சமூகத்தின் எஸ்.என்.டி.பி.- பா.ஜ.க. கூட்டணியும் களமிறங்கியுள்ளது.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 4.30 வரை சுமார் 75% வாக்குகள் பதிவாகி இருந்தன.
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிணராய் விஜயன் கண்ணூரில் வாக்களித்தார். முன்னாள் மத்திய அமைச்சர்கள் முள்ளபள்ளி ராமச்சந்திரன், ஓ ராஜகோபால் ஆகியோரும் இன்றைய தேர்தலில் வாக்களித்தனர்.
முன்னதாக இன்று அதிகாலை கொல்லம் பஞ்சாயத்து இடதுசாரி வேட்பாளர் ஜெரோம் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 38,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு நவம்பர் 5-ந் தேதி 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 7-ந் தேதி நடக்கிறது.
-
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications