மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எம்எல்ஏக்களை நியமித்தது தவறு.. முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எம்எல்ஏக்களை நியமித்தது தவறு என்று புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: யூனியன் பிரதேச விதிக்கு கட்டுப்பட்டு கிரண்பேடி செயல்பட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அமைச்சர்கள் மற்றும் முதல்வர் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆளுநருக்கு எந்த தனிப்பட்ட அதிகாரமும் கிடையாது. யூனியன் பிரதேச மாநில நிர்வாகத்துக்கு ஆளுநர் அறிவுரை வழங்கலாம். ஆனால் தனிப்பட்ட முடிவு எடுக்க கிரண்பேடிக்கு எந்த அதிகாரமும் இல்லை.

மாநில அரசு பரிந்துரைப்படியே நியமனம்
நியமன உறுப்பினர்கள் குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இது தொடர்பான கோப்பு நிர்வாகிகள் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அதன் பின்னர், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இதுவரை 5 முறை
இதுவரை சுமார் 5 முறை நியமன உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக, ரங்கசாமி முதல்வராக இருந்த போது உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
விதிமுறைப்படியும், சட்டப்படியும், வழக்கப்படியும் நியமன உறுப்பினர்கள் குறித்து முதல்வர், அமைச்சர்களும் முடிவு செய்து ஆளுநர் மூலமாக கோப்பை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

அவசரக் கோலத்தில்…
இதுதான் நியமன முறை. ஆனால் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்று 3 பேரை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்தவர்கள் என்று நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications