மோடி அமைச்சர்களில் 30% பேர் மீது கிரிமினல் வழக்குகள்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 30% பேர் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் இவர்களில் 18% பேர் மீது மிகவும் ஆபத்தான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மோடி அமைச்சர்கள், வேட்புமனுத் தாக்கல் செய்த போது தேர்தல் ஆணையங்களிடம் தெரிவித்த தகவல்களை தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயகத்துக்கான மறுசீரமைப்பு கூட்டமைப்பு ஆகியவை ஆராய்ந்தது.
பிரதமர் மோடி உட்பட அமைச்சரவையில் உள்ள 46 பேரில் 44 பேர் தேர்தலில் போட்டியிட்டவர்கள். அமைச்சர்கள் பிரகாஷ் ஜவ்தேகர் மற்றும் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடாதவர்கள். 44 பேர் தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் இந்த இரு அமைப்புகளும் வெளியிட்ட தகவல்களின் தொகுப்பு:

91% கோடீஸ்வரர்கள்..
மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளோரில் 91% கோடீஸ்வரரகள்.

அமைச்சர்களின் சராசரி சொத்து
மோடி அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ13.47 கோடி. 5 அமைச்சர்களின் சொத்து மதிப்பு ரூ30 கோடிக்கும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டாப் லிஸ்டில் அருண் ஜேட்லி
நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லிதான் தமக்கு ரூ113 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரை அடுத்து அகாலிதளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் ரூ108 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

30% பேர் மீது கிரிமினல் வழக்குகள்
மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 44 பேரில் 13 பேர் அதாவது 30% தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

18% சீரியஸ் கிரிமினல் வழக்குகள்
இவர்களில் 18% பேர் அதாவது 8 பேர் மீது சீரியஸான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை முயற்சி, மததுவேஷம், கடத்தல் மற்றும் தேர்தல் வன்முறைகள் என்பவைதான் சீரியஸ் கிரிமினல் வழக்குகள்.

உமாபாரதி மீது கொலை முயற்சி வழக்கு
நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதி மீது கொலை முயற்சி வழக்கு, மத துவேஷ பேச்சு, தேர்தலில் சட்டவிரோதமாக பணம் கொடுத்தது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ராம்விலாஸ் பாஸ்வான், உபேந்திரா குஸ்வாஹா
ராஷ்டிரிய லோக் சமதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் உபேந்திரா மற்றும் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் மீது லஞ்ச வழக்கு நிலுவையில் இருக்கிறது.

ஆட்கடத்தல் வழக்கில் முண்டே
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மீது ஆட்கடத்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications