நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 4 குழந்தைகள் உள்பட 550 இந்தியர்கள் பத்திரமாக டெல்லி வந்தனர்
டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் சிக்கித் தவித்த 550 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 1,896 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 4, 721 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் இதுவரை சுமார் 550 பேரை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டு டெல்லிக்கு அழைத்து வந்துள்ளது. நேற்று இரவு 10.40 மணியில் இருந்து 4 விமானப்படை விமானங்கள் நேபாளத்தில் இருந்து 4 குழந்தைகள் உள்பட 546 பேருடன் டெல்லியில் தரையிறங்கியுள்ளன. முதலாவதாக தரையிறங்கிய விமானத்தில் 4 குழந்தைகள் உள்பட 55 பேர் இருந்தனர்.
நள்ளிரவில் தரையிறங்கிய விமானத்தில் 102 பேரும், அதன் பிறகு தரையிறங்கிய விமானத்தில் 152 பேரும் இருந்தனர். மேலும் இன்று அதிகாலை 4 மணிக்கு வந்த விமானத்தில் 237 பேர் இருந்தனர் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விமானப்படை தளபதி அருப் ராஹா கூறுகையில்,
இந்திய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இன்று நேபாளத்திற்கு 10 விமானங்கள், 12 ஹெலிகாப்டர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். மீட்பு பணிக்கு தேவையானவற்றை அந்த விமானங்களில் அனுப்பி வைக்க உள்ளோம். பொருட்களை அங்கு அளித்துவிட்டு நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் அந்த விமானங்கள் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட உள்ளனர். இன்று முழுவதும் மீட்பு பணி நடக்கும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications