சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக... 16வது லோக்சபாவை அலங்கரிக்கப் போகும் 61 பெண் எம்.பிக்கள்!
டெல்லி: சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக 16-வது நாடாளுமன்றத்தில் அதிக பெண் எம்.பி.க்கள், அதாவது 61 பேர் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. இதுவரை அமைந்த 15 நாடாளுமன்றத்திலும் மிகக் குறைந்த அளவிலேயே பெண்கள் தேர்வு செய்யப் பட்டிருந்தனர். ஆனால், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு கோரி பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் முதன்முறையாக 61 பெண் எம்பிக்கள் அமைய உள்ள 16வது நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளனர். இது 11.3 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாடாளுமன்றத் தேர்தல்...
கடந்த 1952ம் ஆண்டு அதாவது சுதந்திரத்துக்குப்பின் நடைபெற்ற முதல் தேர்தலில் 5 சதவீத பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிகமும், குறைவும்...
கடந்த 1977ம் ஆண்டு மிகக் குறைந்த அளவாக வெறும் 4 சதவீத பெண்களும், அதிகபட்சமாக கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 10.7 சதவீத பெண்களும் (58 பேர்) எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

சாதனை...
2009ம் ஆண்டு சாதனையை முறியடிக்கும் விதமாக நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் சுமார் 61 பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இதுவே அதிகபட்சம் ஆகும். அதாவது 11.3 சதவீதம் பெண் உறுப்பினர்கள்.

சோனியா, சுஷ்மா....
16-வது நாடாளுமன்றத்தில், சோனியா காந்தி, சுஷ்மா சுவராஜ், ஹேமமாலினி உள்ளிட்ட முக்கிய பெண் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications