உலக சாதனைக்காக தயாராகும் 800 கிலோ கிச்சடி... தேசிய உணவாக அறிவிக்க திட்டம்?
இன்று டெல்லியில் நடக்கும் 'உலக உணவு- இந்தியா 2017' என்ற கருத்தரங்கில் உலக சாதனைக்காக 800 கிலோ கிச்சடி செய்யப்பட இருக்கிறது.
டெல்லி: டெல்லியில் இன்று தொடங்கி வரும் 5ம் தேதி வரை 'உலக உணவு- இந்தியா 2017' என்ற கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது. மத்திய உணவுத் துறை அமைச்சகமும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்துகின்றது.
மிகவும் பெரிய அளவில் நடக்க இருக்கும் இந்த கருத்தரங்கில் பல நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் அந்த கருத்தரங்கில் இன்று நடக்கும் நிகழ்வில் கிச்சடி இந்திய தேசிய உணவாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் கடைசியில் அப்படி வெளியான தகவல் பொய் என மறுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று டெல்லியில் நடக்கும் 'உலக உணவு- இந்தியா 2017' என்ற கருத்தரங்கில் உலக சாதனைக்காக 800 கிலோ கிச்சடி செய்யப்பட இருக்கிறது. மேலும் கிச்சடி தேசிய உணவாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.

டெல்லியில் நடக்கும்
டெல்லியில் நாளை தொடங்கி வரும் 5ம் தேதி வரை 'உலக உணவு- இந்தியா 2017' என்ற கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது. மிகவும் பெரிய அளவில் நடக்க இருக்கும் இந்த கருத்தரங்கில் பல நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றன. இந்த உணவு திருவிழாவில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் பிரதிநிதியாக ஒரு உணவுப் பொருள் சமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான உணவுகள் அந்த நாட்டின் தேசிய உணவு ஆகும்.

இன்று கிச்சடிக்கான நாள்
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து இந்த நிகழ்வில் கிச்சடி சமைக்கப்பட இருக்கிறது. கிச்சடி இந்திய உணவுகளின் பிரதிநிதியாக அங்கு சமைக்கப்பட இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அந்த கருத்தரங்கில் இன்று நடக்கும் நிகழ்வில் கிச்சடி இந்திய தேசிய உணவாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதன்காரணமாக ஒரே நாளில் கிச்சடி வைரல் ஆனது.

தவறான தகவல்
இதையடுத்து இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆனது. அதன்படி எல்லா நாடுகளும் அவர்கள் தேசிய உணவை சமைக்க இருக்கிறார்கள் இந்தியாவில் இருந்து கிச்சடி சமைக்கப்பட்ட இருக்கிறது. எனவே கிச்சடிதான் நமது தேசிய உணவு என்று கூறப்பட்டது. இந்த தகவலுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் ''கிச்சடி குறித்த பொய்யான தகவல்களை பரப்பியது போதும். கிச்சடி இந்திய உணவுகளின் பிரதிநிதியாக மட்டுமே சமைக்கப்படுகிறது'' என்று கூறினார்.

இன்று உலக சாதனை
இந்த நிலையில் கிச்சடியை வைத்து இன்று உலக சாதனை செய்யப்பட இருக்கிறது. அதன்படி அங்கு 800 கிலோ கிச்சடி சமைக்கப்பட இருக்கிறது. சஞ்சீவ் கப்பூர் என்ற பிரபல சமையல் நிபுணர் இந்த சாதனையை செய்ய இருக்கிறார். மத்திய அமைச்சர் மறுப்பு தெரிவித்து இருந்தாலும் இன்னும் சிலர் கிச்சடி தேசிய உணவாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறிவருகிறார்கள்.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது!












Click it and Unblock the Notifications