அஞ்சலக சேமிப்பு உட்பட மேலும் 4 வகை சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு தடாலடி
டெல்லி: மேலும் 4 வகையான திட்டங்களுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆதார் அடையாள அட்டை இன்னும் அனைவருக்கும் கிடைக்காத சூழ்நிலையில், பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. ஆதார், அந்தரங்க உரிமையா என்ற வழக்கில், உச்சநீதிமன்றமே ஆதார் என்பது அந்தரங்க உரிமையை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், மேலும் 4 நடைமுறைகளுக்கு ஆதார் அடையாள எண்ணை கட்டாயமாக்கி மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சேவைகளுக்கு கட்டாயம்
தபால்நிலையத்தில் வைத்திருக்கும் கணக்குகளில் பணத்தை முதலீடு செய்யவும், வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் போன்றவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் வரை கெடு
புதிதாக இந்த கணக்குகளை துவங்குவோர் ஆதார் எண்ணுடன் கணக்கு துவங்க வேண்டும் என்றும், ஏற்கனவே இவற்றில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

4 அரசாணைகள் பிறப்பிப்பு
இது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம், தபால்துறை, வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புப் பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றுக்கு என தனித்தனியாக 4 அரசாணைகளை, அரசு பிறப்பித்துள்ளது.

விண்ணப்பித்த எண் தேவை
ஒருவேளை ஆதார் எண் இல்லாத வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் எண் கோரி விண்ணப்பித்த விண்ணப்ப எண்ணை பதிவு செய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல சேமிப்பு திட்டங்களுக்காக அஞ்சலகங்களை பயன்படுத்துவோர் ஆதாரை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. ஏற்கனவே அனைத்து வங்கிகளும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தககது.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications