இரவில் சாப்பிடாமல் சிறையில் தேம்பித் தேம்பி அழுத ராஜேஷ், நுபுர் தல்வார்
காசியாபாத்: ஆருஷி, ஹேம்ராஜ் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் நேற்று இரவு சிறையில் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தார்களாம்.
டெல்லி நொய்டாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஆருஷி தல்வார், அவரது வீட்டில் வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த ஹேம்ராஜ் ஆகியோர் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கை விசாரித்து வந்த உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ராஜேஷ் மற்றும் நுபுர் குற்றவாளிகள் என்று நேற்று தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்னா சிறையில் தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் நேற்று இரவு உணவு சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறையில் ராஜேஷுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. தனக்கு தலை சுற்றிக் கொண்டு வருவதாக தெரிவித்த நுபுரை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
ஆருஷி, ஹேம்ராஜ் கொலை வழக்கில் தல்வார்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications