பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், நடிகர் அக்ஷய்குமாருக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல்
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கொல்லப்பட்ட 25 துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோருக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி உதவி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.9 லட்சம் வழங்கினார். அதே போல் சாய்னா நேவால் ரூ.6 லட்சம் வழங்கினார்.

இதனால் மாவோயிஸ்ட்கள் கடும் கோபமடைந்துள்ளனர். இது தொடர்பாக தெற்கு பஸ்தார் பகுதி மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில் இவ்விருவருக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரபலங்கள் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காகவும், அவர்களுக்காக போராடி வரும் மாவோயிஸ்ட் குழுக்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஏழை மக்களை தாக்கி வரும் ராணுவ படையினர், போலீசார் ஆகியோரை ஆதரிக்க கூடாது.
போலீசாரின் தாக்குதல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடிகர்கள், பிரபலங்கள் குரல் கொடுக்க வேண்டும். துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அக்ஷய் மற்றும் சாய்னா ஆகியோர் உதவியது மிகவும் கண்டனத்திற்குரியது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசு பாதுகாவலர்கள் தலித்கள் மற்றும் முஸ்லிம்களை தாக்கி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அந்த கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications