ரூ.5 கோடி 'ஹெராயின்'.. 10 ரூபாய் சோப்புக்குள் மறைத்து கடத்திய இளைஞர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
கரீம்கஞ்ச்: ரூ.5 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை 10 ரூபாய் சோப்புகளுக்குள் மறைத்து வைத்து கடத்திய இளைஞர் அசாம் போலீஸார் கைது செய்தனர்.
இத்தனை கோடி மதிப்பிலான போதைப்பொருள் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக வடகிழக்கு மாநிலங்களில் சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தயாரிக்கப்படும் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்குவதால், இந்த விவகாரத்திலும் சீனாவின் கை இருக்குமா என்ற ரீதியில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போதைப்பொருள் 'நெட்வொர்க்'
இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, பஞ்சாப், ஹரியாணா, அசாம், மிசோராம் ஆகிய மாநிலங்களில் தான் அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு மற்ற மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. மேற்கூறிய மாநிலங்கள் அனைத்தும் பாகிஸ்தான், சீனா எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் அந்த நாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன. இந்த கடத்தல் ஒரு நெட்வார்க்கை போல செயல்படுகிறது.

நூதனமான முறைகளில் கடத்தல்
இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் சமீபகாலமாக தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. எனினும், அரசாங்கத்தின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு விதவிதமான முறைகளில் போதைப்பொருட்கள் நாட்டு்ககுள் கொண்டு வரப்படுகின்றன. போதைப்பொருட்களை பொட்டலங்களாக கட்டி அவற்றை விழுங்கி விடுவது; எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்து கொண்டு வருவது போன்ற தில்லாலங்கடி வேலைகளில் கடத்தல்காரர்கள் ஈடுபடுகின்றனர்.

அசாமில் தீவிர சோதனை
அந்த வகையில், அசாமின் அஷிம்கஞ்ச் பகுதியில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கடத்திக் கொண்ட செல்லப்படுவதாக நேற்று இரவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை மறித்து போலீஸார் அதில் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், காரை ஓட்டி வந்தவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படவே காரை மறுபடியும் சோதனை செய்தனர்.

சோப்புக்குள் மறைத்து...
அப்போது ஒரு கவரில் 30-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான சோப்புகள் இருந்துள்ளன. சந்தேகத்தின் பேரில் அதில் இருந்த ஒரு சோப்பை போலீஸார் பிளந்து பார்த்த போது, அதற்குள் ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், அனைத்து சோப்புகளிலும் இருந்து ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதில் 675 கிராம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என போலீஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, காரில் வந்தவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications