பயங்கர பனிச்சரிவு.. உத்தரகாண்டில் மலையேற்ற வீரர்கள் 10 பேர் பலி.. 18 பேர் மாயம்
டேராடூன்: உத்தராகண்டில் உள்ள திரெளபதி தண்டா மலை சிகரத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் 10 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பனிச்சரிவில் சிக்கியவர்களில் 18 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மிகப்பெரிய பனிச்சரிவு என்பதால் காணாமல் போனவர்களை தேடுவதில் சிரமம் நீடிப்பதாகவும், அதனால் ராணுவ வீரர்கள் அங்கு செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆபத்து நிறைந்த பயணம்..
இமயமலைத் தொடர்களில் ஏராளமான சிகரங்கள் உள்ளன. இந்த சிகரங்களில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மலையேற்ற வீரர்கள் ஏறி வருகின்றனர். இந்த மலையேற்றத்துக்காகவே பிரத்யேக பயிற்சி முகாம்களும், கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. மலை சிகரங்களில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதே இந்த வீரர்களின் குறிக்கோள் ஆகும். அதே சமயத்தில், இந்த மலையேற்றத்தில் மிகுந்த சிரமங்களும், ஆபத்துகளும் இருக்கின்றன.

எமனாகும் பனிச்சரிவு..
ஒரு அடி தவறினாலும் மரணம் என்ற நிலையில்தான் அவர்கள் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற மனிதத் தவறுகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம், மலையேறும் போது பனிச்சரிவு ஏற்படுவது இயற்கை அரங்கேற்றும் ஆபத்து ஆகும். பல ஆயிரம் டன் கணக்கில் சரியும் பனியானது, அவர்களை அப்படியே மூடிவிட்டு சென்றுவிடும். இதிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம் ஆகும். ஆண்டுதோறும் பல மலையேற்ற வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

16 ஆயிரம் அடியில் பனிச்சரிவு
இந்நிலையில், உத்தர்காசி நகரில் இயங்கும் நேரு மலையேற்றக் கல்லூரியை சேர்ந்த 40 வீரர்கள் உத்தராகண்டில் உள்ள திரெளபதி தண்டா மலை சிகரத்தில் கடந்த மாதம் 23ம் தேதி ஏறத் தொடங்கினர். இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், அவர்கள் கிட்டத்தட்ட 16 ஆயிரம் அடியை எட்டியிருந்தனர். இந்த சூழலில், இன்று காலை 9 மணியளவில் எதிர்பாராதவிதமாக அங்கு பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் 40 மலையேற்ற வீரர்களும் அடித்து செல்லப்பட்டனர்.

10 பேர் பலி
இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புப் படையினர் ஹெலிகாப்டர்களில் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 10 மலையேற்ற வீரர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். 18 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியி்ல் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெரிய அளவிலான பனிச்சரிவு என்பதால் காணாமல் போனவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் அங்கு ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications