விமானத்தில் ரகளையில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் பறக்கத் தடை.. அடுத்த மாதம் முதல் அமல்!
விமானத்தில் ரகளையில் ஈடுபடும் பயணிகளுக்கு வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: விமானத்தில் ரகளையில் ஈடுபடும் பயணிகளுக்கு வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ரகளை செய்யும் பயணிகளுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா அதிகாரியை செருப்பால் அடித்த சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு விமானத்தில் பறக்க அனைத்து விமான நிறுவனங்களும் தடை விதித்தன.
அவர் பகிரங்க மன்னிப்பு கோரியதை அடுத்து தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாகபட்டினத்தில் ஆந்திரா மாநிலத்தின் தெலுங்கு தேச எம்பி திவாகர் ரெட்டி விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டார்.

ரகளையில் ஈடுபடும் அரசியல்வாதிகள்
அங்குள்ள பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடினார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானது.
இதுகுறித்து விசாரணை நடைபெறும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ அறிவித்தார்.

நடவடிக்கை எடுக்க முடிவு
ஏர் இந்தியா உள்ளிட்ட 7 விமான நிறுவனங்கள் திவாகர் ரெட்டிக்கு தடை விதித்துள்ளன.இந்நிலையில் இது போன்று ரகளையில் ஈடுபடும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய விதிமுறைகளை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பறக்க வாழ்நாள் தடை
அதன்படி விமானம் மற்றும் விமான நிலையத்தில ரகளையில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ரகளையில் ஈடுபடும் பயணிகளுக்கு அவர்களது குற்றங்களுக்கு ஏற்ற வகையில் 3 மாதம் முதல் வாழ்நாள் வரை விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபராதமும் விதிக்கப்படும்
மேலும் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என விமான போக்குவரத்துத்துறை செயலாளர் ஆர்என்.சவுபே தெரிவித்துள்ளார். இந்த புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications