ஷாக்கிங்.. உறவினர்களை பார்க்க வந்த சிறார் முகத்தில் "ஸ்டாம்ப்".. சிறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!
போபாலில் சிறையில் உள்ள உறவினர்களை பார்க்க வந்த குழந்தைகளின் முகத்தில் சிறைத்துறை அதிகாரிகள் முத்திரை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்: சிறையில் உள்ள உறவினர்களை பார்க்க வந்த குழந்தைகளின் முகத்தில் சிறைத்துறை அதிகாரிகள் முத்திரை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய பிரதேச சிறையில் உள்ளவர்களை அவர்களின் உறவினர்கள் காணச் சென்றனர்.
அப்போது சிறையில் உள்ள தந்தையை பார்க்கவந்த குழந்தைகளின் முகத்தில் சிறைத்துறை அதிகாரிகள் முத்திரை குத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தைகள் முகத்தில் முத்திரை
குழந்தைகள் முகத்தில் முத்திரை குத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் செய்தித்தாள்களில் வெளியாகின. இதற்கு சமூக நல ஆர்வலர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சிறையில் குவிந்த கூட்டம்
இதுகுறித்து விளக்கம் அளித்த சிறைக்கண்காணிப்பாளர் தினேஷ் நர்கேவ், ரக்ஷாபந்தன் நாளில் 8500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் உறவினர்களை பார்க்க குவிந்தனர். இதனால் அன்றைய தினம் சிறையில் கூட்டம் அலைமோதியது.

கைகளில் தான் குத்தப்படும்
இதனால் குழந்தைகள் முகத்தில் சீல் போடப்பட்டதாக கூறியுள்ளார். வழக்கமாக சிறைக் கைதிகளை பார்க்க வருபவர்களின் கைகளில் முத்திரை குத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
ஆனாலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறிய நர்கேவ், உள்நோக்கத்துடன் இது செய்யப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
இந்நிலையில் குழந்தைகளின் முகத்தில் முத்திரை குத்தப்பட்டது குறித்து மத்திய பிரதேச மனித உரிமைகள் ஆணையம் போபால் சிறைத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறைத்துறை இயக்குநர் இதுகுறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications