மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் சுரங்கப் பாதை.. ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டியது கண்டுபிடிப்பு!
மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்குக் கீழே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது 1885ம் ஆண்டு கட்டப்பட்டு இவ்வளவு நாள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த சுரங்கப்பாதை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையின் கீழே உள்ள இந்தச் சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலில் 20 அடி உயர இரும்புக் கதவு உள்ளது. அதனைத் திறந்து கொண்டு உள்ளே சென்றால் 13 அறைகளும், ஆயுதங்கள் சேமிக்கும் கிடங்கும் உள்ளன.
Mumbai: British era bunker discovered in Maharashtra Raj Bhavan, experts being consulted pic.twitter.com/INAMKxdBnq
— ANI (@ANI_news) August 17, 2016
இந்தச் சுரங்கப் பாதையை மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழு, நேற்று பார்வையிட்டனர். வரலாற்றுச் சின்னமான இந்தச் சுரங்கப் பாதையை, அதன் பாரம்பரியம் பாராமல் பாதுகாக்குமாறு, பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
சுரங்கப் பாதையில் காற்று வசதி, வெளிச்சத்திற்கான வசதி, கழிவு நீர் செல்லும் பாதை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருப்பதைக் பார்வையிட்ட ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த சுரங்கப் பாதை மூடப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications