புர்கா அணிந்து சிஆர்பிஎப் முகாம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! பெண் கைது
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களின் முகாம் மீது புர்கா அணிந்து பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்காக சிஆர்பிஎப் வீரர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.
இதேபோல், ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் சேபூர் நகரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கான முகாம் உள்ளது. இங்கு ஏராளமான வீரர்கள் உள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு
இந்நிலையில் மார்ச் 29ம் தேதி முகாம் மீது திடீரென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சிஆர்பிஎப் தரப்பிலும், போலீசார் தரப்பிலும் விசாரணை துவங்கப்பட்டது. முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசியது யார் என தீவிர விசாரணை நடத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பெண் கைது
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது புர்கா அணிந்து வந்த பெண் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி செல்வது கேமாக்களில் பதிவாகி இருந்தது. இந்த காட்சியை கொண்டு பெட்ரோல் குண்டு வீசிய பெண்ணை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண் குறித்து காஷ்மீர் ஐஜி விஜயகுமார் கூறியதாவது:

யார் இவர்
கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஹசீனா அக்தர். இவரது வயது 28. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது கணவர் பெயர் முகமது யூசுப் பட். இவர் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியை சேர்ந்தவர். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி சேகரித்தது தொடர்பாக 2008ல் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பதிவு செய்த வழக்கில் சிறையில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியான ஆசியா அன்ட்ராபியுடன் இவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பயங்கராவாதத்துக்கு போஸ்டர்
2019ல் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டிய வழக்கில் தொடர்பு கொண்டுள்ளார். இவர் 2021ல் ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications