டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்! ஆம் ஆத்மி அதிர்ச்சி
டெல்லி: டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் குவிந்தனர். ஆனால் ரெய்டு நடக்கவில்லை என சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
'டாக் டூ ஏ.கே.' என்ற பிரசார திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிசோடியாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தது சிபிஐ. கடந்த ஜனவரி மாதம், "டாக் டூ ஏ.கே." என்ற பிரசார நிகழ்ச்சிக்கு ஆம் ஆத்மி அரசு ஏற்பாடு செய்தது.

இந்த சமூக ஊடக பிரச்சாரத்தில் முறைகேடுகள் நடந்ததாக சிசோடியா மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு எதிராக ஒரு ஆரம்பகட்ட விசாரணையை நடத்தியது சிபிஐ.
டெல்லி அரசாங்கத்தின் கண்காணிப்புத் துறையால் சமர்ப்பிக்கப்பட்ட புகாரை அடிப்படையாகக் கொண்டு சிபிஐ குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் பொதுமக்களை உரையாட செய்வது அந்த திட்டத்தின் நோக்கம். இதற்காக டெல்லியை சேர்ந்த பிரபல மக்கள் தொடர்பு அமைப்புடன் சிசோடியா ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த திட்டத்திற்காக 1.5 கோடி ரூபாய்க்கு ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. அரசின் முதன்மை செயலாளரின் ஆட்சேபனைகள் இருந்த போதிலும் அரசாங்கம் இந்த திட்டத்தை அமல்படுத்தியது. இதில் முறைகேடு நடந்துவிட்டதாக குற்றம்சாட்டிய சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை மனிஷ் சிசோடியா வீட்டில் குவிந்தனர். எனவே அங்கு ரெய்டு நடத்தி வருகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதை சிபிஐ மறுத்துள்ளது. விசாரணை மட்டுமே நடப்பதாக சிபிஐ கூறுகிறது. ஆயினும் மனிஷ் சிசோடியா வீட்டை சுற்றிலும் பரபரப்பு நிலவி வருகிறது.
-
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
Senthil Balaji: கரூர் சம்பவம்.. 6 மணி நேரம் நடந்த விசாரணை.. சிபிஐ கேட்டது என்ன? செந்தில் பாலாஜி கொடுத்த பதில் -
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications