இன்னொரு சர்ச்சை உத்தரவு.. கோப்புகளை இந்தியிலேயே எழுதுவோருக்கு பரிசுத் தொகை அறிவிப்பு!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு உத்தரவும் பிரளயத்தை கிளப்பிவிட்டிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகம், சமூக வலைதளங்களில் இந்திக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் அலுவல் பணிகளை முழுவதுமே இந்தியில் மேற்கொள்ளும் ஊழியர்கள் இருவருக்கு தலா ரூ2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இந்தியிலேயே எழுதுகிற ஊழியர்களில் 2வதாக தேர்ந்தெடுக்கப்படுகிற ஊழியருக்கு ரூ1,200-ம் 3வது பரிசாக ரூ600-ம் வழங்கப்பட இருக்கிறது என்கிறது மற்றொரு உத்தரவு.












Click it and Unblock the Notifications