நாகாலாந்து தனிநாடு கோரும் ஆயுத குழுவின் தலைவரை வளைத்துப் போட்ட சீனா- உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
நாகாலாந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சீனா முட்டுக்கட்டை போடுவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன
கோஹிமா: நாகாலாந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவதில் சீனா படுமும்முரமாக இருப்பதாக உளவுத்துறை அளித்து தகவல் மத்திய அரசை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
அகன்ற நாகாலாந்து அல்லது நாகாலிம் என்பதுதான் நாகா ஆயுத குழுக்களின் கோரிக்கை. இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில் உள்ள நாகா இன மக்களின் வாழ்விடங்கள் மற்றும் மியான்மரில் உள்ள நாகா மக்களின் வாழ்விடங்களை ஒன்றிணைந்த ஒரு தனிநாடுதான் நாகாலிம்.

ஆயுதப் போராட்டம்
இந்த அகன்ற நாகலாந்து தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நாகா ஆயுத குழுக்கள் போராடிப் பார்த்தன. ஆனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மத்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

ராணுவம் மீது தாக்குதல்
இத்தகைய அமைப்புகளில் என்.எஸ்.சி.என்(கே) கப்லாங் தலைமையிலான பிரிவு மட்டும் 2015-ல் நாகா அமைதிப் பேச்சுவார்த்தைகளை தன்னிச்சையாக முறித்துக் கொண்டு மீண்டும் ஆயுத வழிக்குத் திரும்பியது. சீனா, மியான்மர் எல்லைப் பகுதிகளில் பதுங்கிக் கொண்டு இதர வடகிழக்கு ஆயுத குழுக்களுடன் இணைந்து இந்திய ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்தது கப்லாங் பிரிவு.

புதிய தலைவர்
கடந்த ஜூன் மாதம் கப்லாங்க் காலமானார். அவரைத் தொடர்ந்து லெப் ஜெனரல் கங்கோ கோனாக், என்.எஸ்.சி.என்.(கே) பிரிவு தலைவராகி இருப்பதாக கூறப்படுகிறது. கோனாக்கை தொடர்பு கொண்டு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகிறது.

சீனாவுடன் பேச்சுவார்த்தை
ஆனால் கோனாக்கை அழைத்து சீனா கடந்த சில மாதங்களாக அதன் தெற்கு மாகாணப் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. நாகா இனமக்கள் கோனாக், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என நெருக்கடி கொடுக்கின்றனர். ஆனால் சீனாவோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு செல்லக் கூடாது என கெடுபிடி காட்டி வருகிறது என்கின்றன உளவுத்துறை தகவல்கள்.
-
மீண்டும் உயிர் பெறும் "இந்தியா.." மம்தா எடுக்கும் முயற்சி.. விஜய் உள்ளே.. ஸ்டாலின் வெளியே! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications