அருணாச்சல பிரதேசத்திற்குள் ரோடு போட வந்த சீனா.. விரட்டி அடித்த இந்திய ராணுவம்!
சீனா ராணுவம் இந்திய எல்லைக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வந்து சாலை அமைக்க முயற்சி செய்து இருக்கிறது.
இட்டாநகர்: சீனா ராணுவம் இந்திய எல்லைக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வந்து சாலை அமைக்க முயற்சி செய்து இருக்கிறது. இந்தியா ராணுவ வீரர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று சீனா வீரர்களை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக இந்தியா -சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை எல்லையில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் தற்போது சீன ராணுவம் அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைந்து இருக்கிறது. இந்த சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்துள்ளது. டிசம்பர் 28ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக ராணுவ தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் மட்டும் இல்லாமல் சீனாவில் இருந்து சாலை அமைக்கும் பணியாளர்களும் வந்து இருக்கிறார்கள். இவர்கள் அருணாச்சல பிரதேச பகுதியில் சாலை அமைப்பது குறித்து அளவு எடுத்து இருக்கிறார்கள்.
இந்த விஷயம் தெரிந்து இந்திய ராணுவம் உடனடியாக அங்கு சென்று இருக்கிறது. இதனால் இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின் இந்திய ராணுவ படை ஆயுதங்களுடன் அங்கு சென்று இருக்கிறது.
இதையடுத்து சீனா அங்கு இருந்து பின் வாங்கியது. அதுமட்டும் இல்லாமல் அவர்கள் கொண்டு வந்த சாலை அமைக்கும் உபகரணங்களையும் அதே இடத்தில போட்டுவிட்டு அவர்கள் சென்று இருக்கிறார்கள் என்று ராணுவ தரப்பு கூறியிருக்கிறது.
இதற்கு முன்பே ஏற்கனவே டோக்லாமில் சீனா நீண்ட அகலமான சாலைகள் அமைக்கமுயற்சி செய்தது. இதற்காக அப்போது நிறைய பணியாளர்களும், ராணுவ வீரர்களும் அங்கு குழுமி உள்ளனர்.
-
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
நடுக்கடலில் திடீரென யூடேர்ன் போட்டு இந்தியாவுக்கு திரும்பிய ரஷ்ய எண்ணெய் கப்பல்.. சீனா கடும் ஷாக் -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை?












Click it and Unblock the Notifications