For Daily Alerts
Just In
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றவாளிகள் விரைவில் கைது- கமிஷனர் பேட்டி
பெங்களூர்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் எம்.என். ரெட்டி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி பெங்களூரில் உள்ள சர்ச் தெருவில் இருக்கும் உணவகத்திற்கு வெளியே குண்டுவெடித்தது. இதில் விடுமுறையை கொண்டாட வந்த சென்னையைச் சேர்ந்த பெண் பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த வழக்கு குறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என். ரெட்டி கூறுகையில்,
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் சில முக்கிய துப்பு கிடைத்துள்ளது. சில ஆதாரங்களும் கிடைத்துள்ளன. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். விரைவில் இது குறித்த விவரங்களை தெரிவிக்கிறேன் என்றார்.
எங்கள் அணி பல்வேறு இடங்களுக்கு சென்று, போதிய ஆதாரங்களை சேகரித்துள்ளது என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments
English summary
The Bengaluru police claims that it has made some headway in the Church Street blasts case. Commissioner of Police, Bengaluru City, M N Reddi informed the media today that it had made some headway in the probe.
Story first published: Monday, February 16, 2015, 14:51 [IST]