ரயிலில் வழங்கப்பட்ட உணவில் புழு, கரப்பான் பூச்சி!

நாடு முழுவதும் ஓடும் தொலை தூர ரயில்களில் பயணிகளுக்கு விற்கப்படும் உணவுகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்தியன் ரயில்வே நிர்வாகம் ஒருபுறம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் புழுவும், கரப்பான் பூச்சியும் இருந்தது பயணிகளை அதிர்ச்சியடைய வைத்தது.
ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில் அமர்த்தப்படும் கேண்டீன் உரிமையாளர்களுக்கே ரயில்களில் உணவு சமைத்து விற்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி - ஹவுரா இடையே ஓடும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட இரண்டு பயணிகளுக்கு வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இதனைக் கண்ட சக பயணிகள், அந்த ரயில் முகல்ஸராய் ரயில் நிலையத்திற்கு வந்தபோது சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஒருமணிநேரம் பயணிகள் ரயிலை இயக்க அனுமதிக்கவில்லை. பின்னர் சுகாதாரமற்ற உணவு பற்றி புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஐஆர்சிடிசி கேண்டீன் உரிமையாளருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனிடையே ரயிலில் கெட்டுபோன அல்லது தரம் குறைந்த உணவை வழங்கினால் சம்பந்தப்பட்ட ஐஆர்சிடிசி கேண்டீன் உரிமையாளருக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ. 5,000 லிருந்து 1 லட்சமாக ரயில்வே நிர்வாகம் அதிகரித்துள்ளது. மேலும் சுகாதாரமற்ற உணவினை சப்ளை செய்தவர்கள் மேற்கொண்டு ரயிலில் உணவு விற்க தடை விதிக்கலாமா என்றும் பரிசீலித்து வருகிறது.
இந்தியன் ரயில்வே வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இதனை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications