அமரீந்தர்சிங்கை வீழ்த்தி சித்து நேற்று சிக்சர்- இன்று டக்அவுட்! பஞ்சாப் புதிய முதல்வரானார் சரண்ஜித்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான நவ்ஜோத்சிங் சித்துவுக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் அவருக்கு முதல்வர் பதவியை தரவில்லை காங்கிரஸ் மேலிடம்.
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர்சிங்குக்கு எம்.எல்.ஏக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அமரீந்தர்சிங் மீது அதிருப்தி தெரிவித்தனர்.
இதனையடுத்து முதல்வர் பதவியை அமரீந்தர்சிங் நேற்று ராஜினாமா செய்தார். மேலும் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்பிகா சோனிக்கு வாய்ப்பு
இதனால் பஞ்சாப் புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று இரவு முதல் நடைபெற்று வருகிறது. டெல்லி மேலிடத்தைப் பொறுத்தவரை அவர்களது சாய்ஸ் மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி. நேருவின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவராக அம்பிகா சோனியின் தந்தை இருந்தார். இந்திரா காந்தியால் 1969-ல் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர் அம்பிகா சோனி.

முதல்வர் பதவியை நிராகரித்த அம்பிகா சோனி
ஆனால் தம்மை தேடிவந்த முதல்வர் பதவியை அம்பிகா சோனி ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்பிகா சோனி, பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை சீக்கியர் ஒருவர்தான் முதல்வராக வேண்டும். எனக்கு பஞ்சாப் மாநிலத்துடன் ஆழமான தொடர்பு இருந்தாலும் சீக்கியர் ஒருவருக்குத்தான் வாய்ப்பு தர வேண்டும். அதனால் முதல்வர் பதவியை வேண்டாம் என நிராகரித்துவிட்டேன் என்றார்.

புதிய முதல்வராகும் சரண்ஜித்சிங்
இதனைத் தொடர்ந்து சண்டிகரில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புதிய முதல்வர் குறித்து விவாதித்தனர். இந்த ஆலோசனைகளில் முதலில் அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தாவா, புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சரண்ஜித்சிங் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான சித்துவும் முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் சித்துவுக்கு அமரீந்தர்சிங் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் சித்துவுக்கு முதல்வர் பதவியை காங்கிரஸ் மேலிடம் தர மறுத்துவிட்டது.

தேர்தல் வியூகம்- 2 துணை முதல்வர்கள்
மேலும் 2 துணை முதல்வர்களை நியமிக்கவும் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாம். தலித் ஒருவருக்கும் தலித் அல்லாத இந்து ஒருவருக்கும் துணை முதல்வர் பதவிகள் தரப்பட உள்ளனவாம். பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் அனைத்து சமூகத்தினரையும் திருப்திபடுத்தும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications