சுகோய்-30 போர் விமான விபத்து.. விமானிகள் இருவர் பலியானதாக அறிவிப்பு
சுகோய்-30 போர் விமானத்தில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: சுகோய் 30 போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் பலியானதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1997ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது சுகோய். பிரான்ஸின் மிராஜ் போர் விமானங்களுக்கு பதிலாக இதை சேர்த்தனர். ஆனால் சேர்த்தது முதலே அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது.

அடிக்கடி தொழில் நுட்பகோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளாகி வருவது அதன் அடையாளமாக மாறிப் போய் விட்டது. கடந்த 23ந் தேதி அஸ்ஸாம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது சுகோய் ரக போர் விமானம்.
அந்த விமானத்தை ஸ்க்ரூட்ரான் தலைவர் டி. பங்காஜ் மற்றும் விமான லெப்டினண்ட் எஸ்.அச்சுதேவ் ஆகிய விமானிகள் இயக்கினர். விமானம் புறப்பட்ட அரை மணிநேரத்தில் திடீரென்று ரேடாரின் இணைப்பை விமானம் இழந்தது. இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இதற்கிடையே மாயமான போர் விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேச மாநிலம் காமெங் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த 26-ம் தேதி கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதில் பயணம் செய்த விமானிகள் கதி என்ன என்றும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், சுகோய்-30 போர் விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications