இளம் தொழில்முனைவர் கையை குதறிய 'முதலை'... அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்!
பெங்களூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவரின் கையை முதலை ஒன்று கடித்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தடையை மீறி சென்றதால் அவர் மீது வழக்கு பதிவு செ
பெங்களூரு : பெங்களூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவர் சுற்றுலா சென்ற இடத்தில் அவரின் கையை முதலை கடித்துவிட்டது. ஆனால் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் மீது வழக்கும் பாய்ந்துள்ளது.
ஐஐடி மாணவரான முடிட் தண்வாடே நாக்பூரைச் சேர்ந்தவர், இந்த 26வயது இளைஞர் பெங்களூருவில் ஹெல்த் கேர் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதனை நிர்வகித்து வருகிறார். விடுமுறை நாட்களில் வனப்பகுதிகளுக்கு சென்று நேரத்தை கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் தண்வாடே.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் தட்டேக்கர் ஏரிக்கு தன்னுடைய பெண் நண்பர் மற்றும் இரண்டு நாய்களுடன் தண்வாடே சுற்றுலா சென்றுள்ளார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏரிக்கு அருகில் சென்ற தண்வாடே தன்னுடைய நாய்களை நீர்நிலைகளில் குளிக்க வைக்க நினைத்துள்ளார்.

பாய்ந்த முதலை
அப்போது நீரில் இருந்த முதலை ஒன்று திடீரென பாய்ந்து வந்து தண்வாடேவின் இடது கையை கவ்வியது. வலியால் துடித்த தண்வாடேவை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் முதலையிடமிருந்து அவரது பெண் நண்பர் காப்பாற்றியுள்ளார்.

சிகிச்சை
முதலை கடித்ததில் இடது கையை முழுமையாக இழந்த தண்வாடே உடனடியாக ஹாஸ்மேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

வழக்குப் பதிவு
இதனிடையே சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்த தண்வாடே மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் சென்றது குறித்தும், முதலை கடித்தது குறித்த விவரங்களை கூறுமாறு தண்வாடேவின் பெண் நண்பரை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். முதலை தண்வாடேவின் கையை மட்டும் கடித்து இழுத்ததால் எஞ்சிய தசைப் பகுதிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒன்றரை மாதத்திற்கு பிறகே அவருக்கு செயற்கை கை பொருத்த முடியும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வனத்துறை எச்சரிக்கை
அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ராம்நகர் மாவட்ட ஏரிப் பகுதிக்கு பலரும் வந்து செல்கின்றனர். இங்கு அதிக அளவில் முதலைகள் இருப்பதால் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இது தெரியாமல் வந்ததால் இடது கையை இழந்தோடு வழக்குப் பதிவிற்கும் ஆளாகியுள்ளார் இளம் தொழில்முனைவர் என்று கூறுகின்றனர் வனத்துறையினர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications