இளம் தொழில்முனைவர் கையை குதறிய 'முதலை'... அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்!
பெங்களூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவரின் கையை முதலை ஒன்று கடித்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தடையை மீறி சென்றதால் அவர் மீது வழக்கு பதிவு செ
பெங்களூரு : பெங்களூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவர் சுற்றுலா சென்ற இடத்தில் அவரின் கையை முதலை கடித்துவிட்டது. ஆனால் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் மீது வழக்கும் பாய்ந்துள்ளது.
ஐஐடி மாணவரான முடிட் தண்வாடே நாக்பூரைச் சேர்ந்தவர், இந்த 26வயது இளைஞர் பெங்களூருவில் ஹெல்த் கேர் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதனை நிர்வகித்து வருகிறார். விடுமுறை நாட்களில் வனப்பகுதிகளுக்கு சென்று நேரத்தை கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் தண்வாடே.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் தட்டேக்கர் ஏரிக்கு தன்னுடைய பெண் நண்பர் மற்றும் இரண்டு நாய்களுடன் தண்வாடே சுற்றுலா சென்றுள்ளார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏரிக்கு அருகில் சென்ற தண்வாடே தன்னுடைய நாய்களை நீர்நிலைகளில் குளிக்க வைக்க நினைத்துள்ளார்.

பாய்ந்த முதலை
அப்போது நீரில் இருந்த முதலை ஒன்று திடீரென பாய்ந்து வந்து தண்வாடேவின் இடது கையை கவ்வியது. வலியால் துடித்த தண்வாடேவை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் முதலையிடமிருந்து அவரது பெண் நண்பர் காப்பாற்றியுள்ளார்.

சிகிச்சை
முதலை கடித்ததில் இடது கையை முழுமையாக இழந்த தண்வாடே உடனடியாக ஹாஸ்மேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

வழக்குப் பதிவு
இதனிடையே சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்த தண்வாடே மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் சென்றது குறித்தும், முதலை கடித்தது குறித்த விவரங்களை கூறுமாறு தண்வாடேவின் பெண் நண்பரை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். முதலை தண்வாடேவின் கையை மட்டும் கடித்து இழுத்ததால் எஞ்சிய தசைப் பகுதிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒன்றரை மாதத்திற்கு பிறகே அவருக்கு செயற்கை கை பொருத்த முடியும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வனத்துறை எச்சரிக்கை
அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ராம்நகர் மாவட்ட ஏரிப் பகுதிக்கு பலரும் வந்து செல்கின்றனர். இங்கு அதிக அளவில் முதலைகள் இருப்பதால் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இது தெரியாமல் வந்ததால் இடது கையை இழந்தோடு வழக்குப் பதிவிற்கும் ஆளாகியுள்ளார் இளம் தொழில்முனைவர் என்று கூறுகின்றனர் வனத்துறையினர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications