ரூபாய் நோட்டு பற்றாக்குறை தீர ஜனவரியாகி விடும்.. அரசே சொல்லிவிட்டது
ஜனவரி மாத மத்தியில் நாட்டில் ஏற்பட்டுள்ள பணப்பற்றாக்குறை முடிவுக்கு வரும் என நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.
டெல்லி: நாட்டில் ஏற்பட்டுள்ள பணப் பற்றாக்குறை ஜனவரி மாத மத்தியில் தீரும் என நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொடர்பான கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8 ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். பழை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும அஞ்சலகங்களில் டிசம்பர் 30ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே வங்கிகளில் செலுத்த முடியும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையால் நாட்டில் கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் தலைமையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமிதாப் கண்ட் ஜனவரி மாத மத்தியில் பணப்பற்றாக்குறை முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications