விமானம் கிளம்ப தாமதமானால் சம்பளம் 'கட்': அதிர்ச்சியில் ஏர் இந்தியா ஊழியர்கள்
டெல்லி: விமானம் புறப்பட காலதாமதமாக காரணமாக இருக்கும் ஏர் இந்தியா ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று விமான போக்குவரத்து துறை செயலாளர் வி. சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே நஷ்டத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் விமானங்கள் அடிக்கடி தாமதமாக புறப்படுவதால் பயணிகள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் விமான போக்குவரத்து துறை செயலாளர் வி. சோமசுந்தரம் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு,

தாமதம்
விமானம் தாமதாக கிளம்ப காரணமாக இருக்கும் விமானிகள், சிப்பந்திகள், பொறியாளர்கள், உணவு வழங்குபவர்கள் ஆகியோரின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று சோமசுந்தரம் அறிவித்துள்ளார்.

அமல்
இந்த சம்பள பிடித்த சட்டம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. விமானங்கள் தாமதாக கிளம்புவதை தவிர்க்கவே சோமசுந்தரம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிப்பந்திகள்
சிப்பந்திகள் பற்றாக்குறையை போக்க ஏர் இந்தியாவுக்கு 800 புதிய சிப்பந்திகள் பணியமர்த்தப்படுவார்கள் என்று சோமசுந்தரம் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிட்ட ஒருவாரத்திற்குள் சம்பள பிடித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கை
சம்பள பிடித்தம் குறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று விமானி ஏ.கே. கோவிள் கூறுகையில், விமானம் தாமதமாக காரணமாக இருக்கும் விமானிகள், சிப்பந்திகள், பொறியாளர்கள், கேட்டரிங் ஆட்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். விமானம் தாமதமாக கிளம்புவதால் ஏற்படும் நஷ்டம் அவர்களின் சம்பளம் மூலம் சரிகட்டப்படும். தொடர்ந்து தாமதமாக பணிக்கு வருவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications