தற்கொலை செய்த ராம் கிஷனை தியாகியாக அறிவிக்க டெல்லி அமைச்சரவை முடிவு
தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷனை தியாகியாக அறிவிக்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
டெல்லி: ஒரே பதவி, ஓரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த போரட்டத்தின் போது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவாலை தியாகியாக அறிவிக்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் (வயது 70) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களின் நலன்களுக்காகவே இந்த முடிவை எடுத்தாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட ராம்கிஷனுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும், அவரை தியாகியாக அறிவிக்கப் போவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லியில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முன்னாள் ராணுவ வீரர் ராம்கிஷன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், ராம்கிஷனை தியாகியாக அறிவிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications