மும்பை பாந்த்ராவில் குடிநீர் குழாய் உடைப்பு... பாட புத்தகங்கள், ஆவணங்களை இழந்து தமிழர்கள் தவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் குடிநீர் குழாய் உடைந்ததால் அங்கு வசிக்கும் தமிழர்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
மும்பை: மும்பை பாந்த்ராவில் குடிநீர் குழாய் உடைந்ததில் தமிழர்களின் உடைமைகள் சேதமடைந்துள்ளதால் அரசின் உதவியை நாடியுள்ளனர்.
மும்பை பாந்த்ரா டெர்மினஸ் எதிரே உள்ளது இந்திரா நகர். இங்கு 92 ஆண்டுகளுக்கு முன்பு அமைகக்கப்பட்ட ராட்சத குடிநீர் குழாய் ஒன்று உள்ளது. இது கடந்த 2 நாள்களுக்கு முன் நீரின் அழுத்தம் காரணமாக உடைந்தது.
இதனால் தண்ணீர் மிகவும் வேகமாக பீய்ச்சி வெளியேறியது. அப்போது தண்ணீர் குழாய் அருகே விளையாடி கொண்டிருந்த பிரியங்கா (9), அவரது சகோதரர் விக்னேஷ் (8 மாதம்) ஆகியோர் தண்ணீரின் வேகத்தில் தூக்கிவிசப்பட்டனர்.

இருவரும் இறந்தனர்
இதனால் இருவரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

வெள்ளம் சூழ்ந்தது
குடிநீர் குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் அந்த பகுதியில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் வீடுகளில் இருந்த பொருள்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.

முக்கிய ஆவணங்கள்
டிவி உள்ளிட்ட பொருள்களும் சேதமடைந்தன. ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் அடித்து செல்லப்பட்டன. இதை போல், பள்ளி மாணவர்களின் புத்தகங்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மாற்று துணிகூட இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

அரசே உதவுங்கள்
இதுகுறித்து தமிழர்கள் சிலர் கூறுகையில், தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறு போல் ஓடியதால் எங்கள் உடைமைகளை இழந்துவிட்டோம். முக்கிய ஆவணங்களும் அடித்துச் செல்லப்பட்டன. மாணவர்களின் பள்ளிப் புத்தகங்களும் தண்ணீரில் சென்றுவிட்டன. சிலவற்றை மட்டும் எடுத்து காயவைத்து வருகிறோம். எனவே மாநில அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதோடு ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்க உதவி புரிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications