மக்களின் ஜனாதிபதி' கலாம்.. அடைமொழியுடன் சல்யூட் வைக்கும் ஆங்கில சேனல்கள்
டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைந்த செய்திகளை, ஒளிபரப்பும் ஆங்கில செய்தி ஊடகங்கள் அவருக்கு 'மக்களின் ஜனாதிபதி' என்று பெயர் சூட்டி சல்யூட் வைத்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், அப்துல் கலாம் நேற்று இரவு ஷில்லாங்கில் மரணமடைந்த செய்தி வெளியானது முதல், நாட்டின் அனைத்து ஊடகங்களும், அதுகுறித்த செய்திகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

ஆங்கில செய்தி ஊடகங்கள், கலாமிற்கு, மக்களின் ஜனாதிபதி என்று பெயர் சூட்டி, அவருக்கு ராயல் சல்யூட் தந்துவருகிறது. ஆங்கில ஊடகங்கள் தங்களது பிளாஸ் நியூஸ்களுக்கு மேலே, மக்களின் ஜனாதிபதி என்ற வார்த்தையை கோட் செய்து ஒளிபரப்புகின்றன.
முன்னணி சேனல்களான சிஎன்என்என்-ஐபிஎன், என்டிடிவி, டைம்ஸ்நவ், இந்தியா டுடே ஆகியவை இவ்வாறு ஒளிபரப்புவதோ, RIPKalam என்ற வார்த்தையை ஹேஸ்டேக்காக பயன்படுத்துகின்றன. ஹிந்தி உள்ளிட்ட சில பிற மொழி செய்தி சேனல்களும் அவ்வாறே செய்கின்றன.












Click it and Unblock the Notifications