இந்தியாவில் அதிகரிக்கும் இளமை பட்டாளம்- ஐநா ஆய்வில் தகவல்
டெல்லி: இந்தியாவில் கடந்த சில வருடங்களாக இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
இதனால் மற்ற நாடுகளைவிடவும் இந்தியா மிகவும் இளமையாக திகழ்வதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா நாடுகளிலும் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஐநா சபை இதனை வெளியிட்டுள்ளது.

சரிசமமான எண்ணிக்கை:
மேற்காசிய நாடுகளை சேர்ந்த 18 நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை சரிசமமாக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் அமைப்பு தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது.

3 இல் ஒருவர் இளைஞர்:
மேலும், 3 இல் ஒருவர் இளைஞராக இருப்பதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இதனால் அதிக அளவில் இளைஞர்கள் பரவிக் காணப்படுகின்றனர்.

அதிகரிக்கும் இளைஞர்கள்:
கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இளைஞர்களி்ன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மில்லியன் கணக்கில் இளமை:
இவர்களில் 10முதல் 19 வயதுடையவர்கள் 253 மில்லியனாகவும், 15 முதல் 24 வயதுடையோர் எண்ணிக்கை 231 மில்லியனாகவும் உள்ளனர்.

கல்வி அறிவும் ஜாஸ்தியாம்:
இவர்களில்பெரும்பாலோனோர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா,மேற்குவங்காளம் போன்ற மாநிலங்கள் 85-95 சதவீதம் வரையில் இளைஞர்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர்

தமிழ்நாட்டில் அதிகம்தான்:
தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 10 ஆண்டுகளாக இளைஞர்களின் எண்ணிக்கை அதிக சதவீத அளவை கொண்டுள்ளது.

எங்கெங்கும் இளைஞர்கள்:
கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தொகையில் சுமார் 72 சதவீதம் பேர் இளைஞர்களாகவும், 68 சதவீதம் பேர் நகர்புறங்களை சேர்ந்தவர்களாகவும் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications