ஓட்டு எந்திரத்தில் முறைகேடு புகார்கள் எதிரொலி... டெல்லியில் நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம்
மின்னனு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் நடக்கிற தேர்தல்களில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது அண்மைக்காலமாக பெருத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, தில்லுமுல்லு செய்ய ஏற்றவை, தேர்தல் முடிவுகளையே மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளவை என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இதன் காரணமாக மின்னணு ஓட்டு எந்திரங்களை ஒழித்துக்கட்டிவிட்டு மீண்டும் பழைய வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து மனுக்களும் அளித்திருந்தனர்.

இதனையடுத்து, அனைத்துக் கட்சிகளிடமும் விவாதிக்க ஏற்ற வகையில் தேர்தல் கமிஷன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள அம்சங்கள் குறித்து தேர்தல் ஆணையம் நிகழ்ச்சி நிரல் வெளியிட்டுள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 7 தேசிய கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட 48 மாநில கட்சிகளுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பிளவுபட்டுள்ள நிலையில், அதன் இரு அணிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications