பத்வாக்களை மக்கள் மீது திணிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

பத்வாக்கள் விடுவது சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி விஷ்வ லோச்சன் மதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.கே. பிரசாத் மற்றும் பி.சி. கோஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,
இஸ்லாமிய பத்வாக்கள் மற்றும் இஸ்லாமிய தலைவர்களின் உத்தரவுகள் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டது அல்ல. சட்டத்தால் அனுமதிக்கப்படாத எதையும் மக்கள் பின்பற்ற வேண்டியது இல்லை. இஸ்லாமிய தலைவர் எந்த விஷயத்தையும் கையில் எடுத்துக் கொண்டு பத்வா விடலாம். ஆனால் இது ஒரு சாதராண மனிதனின் கருத்தை ஒத்துப் போகும்.
பத்வாக்களால் யாராவது பாதிக்கப்பட்டுகிறார்கள் என்றால் அவர்களை காப்பாற்ற நாங்கள் நிச்சயம் வருவோம். சில பத்வாக்கள் சமூகத்தின் நலனுக்காக விடப்படுகிறது. ஆனால் பத்வாக்கள் யாரையும் கட்டுப்படுத்தாது.
இந்து மதத்தில் சங்கராச்சாரியாக்கள், மண்டலேஸ்வரர்கள் மற்றும் மகாமண்டலேஸ்வர்கள் உள்ளனர். அவர்கள் கூறுவதை சிலர் பின்பற்றுகிறார்கள். ஆனால் அதற்கு சட்ட அனுமதி இருக்கிறதா?
யாராவது பத்வாக்களையோ, இஸ்லாமிய மத தலைவர்களின் உத்தரவுகளையோ பின்பற்றினால் அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் ஆகும். பத்வாவை யாராவது பின்பற்றவில்லை என்றால் அவர்களை காக்க நீதித் துறை உள்ளது என்றனர்.
பத்வாவை ஏற்றுக் கொள்வது தனிப்பட்ட நபரின் விருப்பம் என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications