மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சீனாவுக்கு லாபம்.. மவுனம் கலைத்து விளாசும் மன்மோகன் சிங்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு குறு வியாபாரிகளைப் பெரிதும் பாதித்து உள்ளதாக மன்மோகன் சிங் வேதனை தெரிவித்து உள்ளார்.
Recommended Video

அகமதாபாத்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவிற்குள் சீனப்பொருட்களின் வரத்து அதிகரித்து இருக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டு உள்ளார்.
மோடியின் பா.ஜ.க அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
கள்ளநோட்டுகளும் ,பெரு முதலாளிகளிடம் இருக்கும் கருப்புப் பணத்தையும் ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு மக்கள் சிரமம் பார்க்காது ஆதரவு அளிக்கவேண்டும் என்று மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த அறிவிப்பால் ஒரே நள்ளிரவில் 15 லட்சம் கோடி பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

புள்ளி விவரங்கள்
பொருளாதார நடவடிக்கைகளில் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டாலும், இது தோல்வியிலேயே முடிந்துள்ளதாக பொருளாதார புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் மட்டுமில்லாது சிறு மற்றும் குறு வியாபாரிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டனர். தற்போதுவரை அவர்களின் நிலை மிகவும் மோசமாகவே இருக்கிறது.

கருப்பு தினம்
இந்நிலையில், அரசு இந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு வெற்றி விழாவாகக் கொண்டாட இருக்கிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் கருப்பு தினமாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து குஜராத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் பேசினார்.

சீனாவுக்கு லாபம்
அதில், மோடியின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அழிவுக்கான பாதையையே வகுத்துள்ளது. 2016-17 ஆண்டில் சீனாவின் இறக்குமதி 1.96 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 2.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இன்னும் மோசமாகும்
அதுபோல ஜி.எஸ்.டி., நடவடிக்கையும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் வெகுவாக பாதித்துள்ளது. அதன் வெளிப்பாடே மொத்த உள்நாட்டு உற்பத்தி மோசமான நிலையை எட்டியுள்ளது. இன்னும் மோசமான நிலைக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications