”தங்க வேட்டை” கடத்தலை காட்டிக் கொடுத்தா அள்ளிக் கொடுப்போம் - சொல்கிறது மத்திய அரசு!
டெல்லி: நாட்டில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் கடத்தல் குறித்து தகவல் தருவோருக்கு அளிக்கப்பட்டு வரும் சன்மானம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்வது, மறைமுக வரிகள் ஏய்ப்பைக் கண்டறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் வெகுமதியின் உச்சவரம்பும் ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வெளியிட்ட புதிய வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்,
"வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தப்படும் தங்கம் குறித்து தகவல் தருவோருக்கு தற்போது பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில், 10 கிராமுக்கு ரூபாய் 500 வீதம் சன்மானம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொகை ரூபாய் 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பறிமுதல் செய்யப்படும் வெள்ளியின் மதிப்பின் அடிப்படையில், ஒரு கிலோவுக்கு ரூபாய்1,000 வீதம் அளிக்கப்பட்டு வரும் சன்மானம், ரூபாய் 3,000 ஆக அதிகரிப்பட்டுள்ளது.
இதுதவிர, கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்வது, ஆயுதம் மற்றும் வெடிபொருள்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுப்பது, மறைமுக வரி ஏய்ப்பை கண்டறிவது, கள்ளநோட்டு புழக்கத்தை தடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுங்க வரி, மத்திய கலால் வரி மற்றும் சேவை வரித் துறையின் துணை ஆணையர் நிலை வரை உள்ள அதிகாரிகளுக்கு, அவர்களின் பணிக்காலத்தில் வழங்கப்பட்டு வந்த மொத்த வெகுமதியின் உச்சவரம்பு ரூபாய் 15 லட்சத்திலிருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் முதல் முறையாக, இணை ஆணையர், கூடுதல் ஆணையர் நிலைகளில் உள்ள அதிகாரிகளும் இந்த வெகுமதியை பெற தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications