”தங்க வேட்டை” கடத்தலை காட்டிக் கொடுத்தா அள்ளிக் கொடுப்போம் - சொல்கிறது மத்திய அரசு!
டெல்லி: நாட்டில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் கடத்தல் குறித்து தகவல் தருவோருக்கு அளிக்கப்பட்டு வரும் சன்மானம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்வது, மறைமுக வரிகள் ஏய்ப்பைக் கண்டறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் வெகுமதியின் உச்சவரம்பும் ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வெளியிட்ட புதிய வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்,
"வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தப்படும் தங்கம் குறித்து தகவல் தருவோருக்கு தற்போது பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில், 10 கிராமுக்கு ரூபாய் 500 வீதம் சன்மானம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொகை ரூபாய் 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பறிமுதல் செய்யப்படும் வெள்ளியின் மதிப்பின் அடிப்படையில், ஒரு கிலோவுக்கு ரூபாய்1,000 வீதம் அளிக்கப்பட்டு வரும் சன்மானம், ரூபாய் 3,000 ஆக அதிகரிப்பட்டுள்ளது.
இதுதவிர, கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்வது, ஆயுதம் மற்றும் வெடிபொருள்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுப்பது, மறைமுக வரி ஏய்ப்பை கண்டறிவது, கள்ளநோட்டு புழக்கத்தை தடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுங்க வரி, மத்திய கலால் வரி மற்றும் சேவை வரித் துறையின் துணை ஆணையர் நிலை வரை உள்ள அதிகாரிகளுக்கு, அவர்களின் பணிக்காலத்தில் வழங்கப்பட்டு வந்த மொத்த வெகுமதியின் உச்சவரம்பு ரூபாய் 15 லட்சத்திலிருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் முதல் முறையாக, இணை ஆணையர், கூடுதல் ஆணையர் நிலைகளில் உள்ள அதிகாரிகளும் இந்த வெகுமதியை பெற தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications