எச்.ஏ.எல். தயாரித்த முதல் பயிற்சி விமான வெள்ளோட்டம் வெற்றி!
பெங்களூரு: இந்திய விமானப் படைக்காக தயாரித்துள்ள முதல் பயிற்சி விமானத்தை இன்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டது.
வெள்ளோட்டம் வெற்றிகரமாக இருந்ததாக எச்ஏஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளோட்ட விவரம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது.

எச்ஏஎல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற தலைமை பைலட் குரூப் கேப்டன் சுப்ரமணியம் விமானத்தை செலுத்திப் பரிசோதித்தார். அரை மணி நேரம் அவர் வானில் வட்டமடித்தார்.
இந்திய விமானப்படைக்கு மொத்தம் 72 பயிற்சி விமானங்களை எச்ஏஎல் தயாரித்துத் தரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இந்த பயிற்சி விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள எச்ஏஎல் நிறுவனத்தில் வைத்து இது கட்டப்பட்டுள்ளது.
Hindustan Turbo Trainer (HTT-40) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானமானது, இன்று காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரை மணி நேரம் வானில் பறந்த பின்னர் பத்திரமாக தரையிறங்கியது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்ததாகவும், அதன் புள்ளிவிவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில்தான் எச்ஏஎல் நிறுவனம் தயாரித்துள்ள இலகு ரக போர் விமானமான தேஜாஸில் பறந்து விமானப்படைத் தலைமைத் தளபதி அரூப் ராஹா பரிசோதனை செய்து பார்த்தார் என்பது நினைவிருக்கலாம்.
எச்டிடி-40 பயிற்சி விமானத் திட்டத்தை சரியான வேகத்தில் செயல்படுத்தி வருகிறது எச்ஏஎல். திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் விமானப்படையிடம் 72 விமானங்களையும் அது கொடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதற்காக சமீபத்தில்தான் எச்ஏஎல் நிறுவனத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பாராட்டியிருந்தார்.
இந்த பயிற்சி விமானமானது டர்போ என்ஜினில் இயங்கக் கூடியதாகும். தற்போது இது பயிற்சிக்கான விமானமாக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் ஆயுதங்களைப் பொருத்தக் கூடியவகையில் மாற்றம் செய்யம் திட்டமும் எச்ஏஎல்லிடம் உள்ளதாம்.
முதல் பயிற்சி விமானத்தின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் சோதனை நடந்த பெங்களூரு எச்ஏஎல் நிறுவனத்தின் விமான ஆய்வு மற்றும் வடிவமைப்பு மையத்தில் ஊழியர்களிடையே உற்சாகம் கரைபுரண்டோடியது.
இந்த பயிற்சி விமான தயாரிப்பு குழுவை எச்ஏஎல் தலைவர் சுவர்ண ராஜுவும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து ராஜு ஒன்இந்தியாவிடம் கூறுகையில் இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாள். இதை சாதித்த இளம் அணியினருக்கு எனது பாராட்டுக்கள், வாழ்த்துகள் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications