அச்சச்சோ.. ஆதாருடன் பான் எண்ணை இணைக்கவில்லையா?
ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நபர் வரி ஏய்ப்பாளராக சந்தேகத்துக்குள்ளாக்கப்பட்டு வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் சிக்கிவிடுவார்.
டெல்லி: மத்திய அரசின் உத்தரவான ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் வருமான வரித்துறையின் ஆய்வை சந்திக்க வேண்டியிருக்குமாம்.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு நடைமுறைகளும் அன்று முதல் அமலுக்கு வந்தன.

வரி ஏய்ப்பு செய்வதற்காக மக்கள் பல்வேறு பான் எண்களை பயன்படுத்தி வருவதாக வருமான வரித்துறை தெரிவிக்கிறது. அதை தடுக்க பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வருமான வரி சட்டம் பிரிவு 139AA-யின்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை எனில், அந்த நபரின் பான் எண் செல்லாததாகிவிடும் என்றும் அறிவித்துள்ளது.
ஜூலை 1-ஆம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒருவர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் அந்த நபர் வரி ஏய்ப்பாளராகவும், வருமானத்தை அரசிடம் மறைப்பவராகவும் கருதப்படுவார்.
பின்னர் எங்கள் துறையின் மீளாய்வுக்குள்படுத்தப்படுவார். 2 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச் இறுதியில் வரி செலுத்துவோர் 6.5 கோடி பேராக இருந்தனர். ஆனால் அவர்களுள் 5 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications