ஹோட்டல்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைப்பு இன்று முதல் அமல்
ஹோட்டல்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
Recommended Video

டெல்லி : ஹோட்டல்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டிருப்பது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மத்திய அரசு ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. வரி மாறுபாட்டைக் கலைந்து இந்தியா முழுமைக்கும் ஒரே வரி விதிக்கும் முறை தான் இந்த ஜி.எஸ்.டி. இதில் பல பொருட்களுக்கு அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்பட்டது.

ஹோட்டல்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% ஆக அறிவிக்கப்பட்டது. அதுவே ஏ.சி உணவகங்கள் என்றால் 18% என்று நிர்ணயிக்கப்பட்டது. இதனால் உரிமையாளர்களும், மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வரி விதிப்பால் ஹோட்டல்கள் மட்டுமின்றி பலதரப்பட்ட தொழில்களும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம அஸ்ஸாமின் குவஹாத்தியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூடியது.
இக்கூட்டத்தில் 170க்க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது. இதில் ஹோட்டல்களுக்கான வரியும் 5% ஆக குறைக்கப்பட்டது. அது ஏ.சி உணவகமாக இருந்தாலும், ஏ.சி இல்லாத உணவகமாக இருந்தாலும் இனிமேல் 5% வரி தான் வசூலிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. இன்று முதல் அந்த வரிக்குறைப்பு அமலுக்கு வருகிறது.
ஜி.எஸ்.டி வரி விதிப்பால் விலை உயர்வின் காரணமாக ஹோட்டல்களின் வருவாய் குறைந்துள்ளது இப்போது இந்த வரிக்குறைப்பால் மீண்டும் மக்கள் ஹோட்டல்களுக்கு வருவார்கள். இது ஹோட்டல்கள் உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு சிறப்பான செய்தி என்று கேரள உணவகங்கள் கூட்டமைப்பின் தலைவர் மொய்தீன்குட்டி ஹாஜி தெரிவித்து உள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications