விமான நிலையத்தில் ரகளை..மன்னிப்பு கேட்க முடியாது..தெலுங்கு தேச எம்பி திவாகர் ரெட்டி தெனாவட்டு பதில்
விமான நிலைய அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச எம்பி திவாகர் ரெட்டி மன்னிப்பு கேட்க முடியாது எனக் கூறியுள்ளார்.
விசாகபட்டினம்: விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. திவாகர் ரெட்டி கூறியுள்ளார்.
தெலுங்குதேசம் கட்சி எம்.பி. திவாகர் ரெட்டி நேற்று காலை இன்டிகோ விமானத்தில் ஹைதராபாத் செல்ல விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தார். காலை 8.10 மணிக்கு செல்லும் இண்டிகோ விமானத்தில் செல்ல டிக்கெட் புக் செய்திருந்த அவர், 28 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.

இதனால் விமான நிறுவன அதிகாரிகள், கவுன்ட்டர் மூடப்பட்டுவிட்டதால் நீங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியாது. அடுத்த விமானத்தில் பயணம் செய்யலாம் என்றனர். இதைத் தொடர்ந்து அந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கோபத்தில் அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். ஊழியர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதைத் தொடர்ந்து இன்டிகோ விமான நிறுவனங்களில் அவர் பயணிக்க தடை விதித்தது அந்த நிறுவனம். இதைத்தொடர்ந்து ஏர் இந்தியா, ஏர் ஏசியா, கோ ஏர், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்டாரா உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்க திவாகர் ரெட்டிக்கு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பேசிய திவாகர் ரெட்டி, விமான நிலையத்தில் எந்த பொருட்களையும் சேதப்படுத்தவில்லை. யார் மீதும் தாக்குதல் நடத்த வில்லை. இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு வேறு ஒரு விமான நிலையத்திற்கு இதே போல் தாமதமாக வந்த திவாகர் ரெட்டி அங்கும் ரகளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications