துவங்கி மூன்றே மாதத்தில் டார்ஜிலிங்கை கைப்பற்றிய குட்டி கட்சி! அதிர்ச்சியில் பாஜக, திரிணாமுல் காங்.!
கொல்கத்தா: திரிணாமுல், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளைத் தோற்கடித்து டார்ஜிலிங் நகராட்சியைக் கைப்பற்றி இருக்கிறது மூன்று மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட ஹம்ரோ கட்சி.
எந்த பின்புலமும் இல்லாமல் மூன்று மாதத்துக்குப் முன்பு தொடங்கப்பட்ட ஒரு கட்சி, தேசிய கட்சிகளையும், மாநிலத்தில் ஆளும் கட்சிகளையும் தோற்கடித்து, ஒட்டுமொத்த நகராட்சியையும் கைப்பற்றியது என்று சொன்னால் நம்ப முடியுமா. ஆனால், இது உண்மையில் நடந்திருக்கிறது.
கொல்கத்தாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது. கொல்கத்தாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஹம்ரோ கட்சி.

கொல்கத்தா தேர்தல்
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் பிப்ரவரி 27ந் தேதியன்று 108 நகர்ப்புற இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. வாக்குப் பதிவின்போது, ஆங்காங்கே வன்முறை மற்றும் சட்டவிரோத சம்பவங்கள் அரங்கேறின. ஆனால் தேர்தல் அமைதியாக நடந்திருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியது.

வெற்றி
மேற்கு வங்கத்தில் உள்ள 108 இடங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மேற்கு வங்காள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று அமோக வெற்றி பெற்றது. 108 நகராட்சிகளில் 102 இடங்களை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

டார்ஜிலிங்
ஆனால் டார்ஜிலிங் நகராட்சியில் மட்டும் முடிவுகள் வேறு விதமாக இருந்தது. டார்ஜிலிங்கில் உள்ள 32 இடங்களில், 18 இடங்களை முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் உள்ளூர் கட்சியான ஹம்ரோ கட்சி வென்று, டார்ஜிலிங் நகராட்சியை அக்கட்சி கைப்பற்றியது. இந்த ஹம்ரோ கட்சி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டிருக்கிறது. இக்கட்சியின் தலைவர் அஜோய் எட்வார்ட்ஸ் தோல்வியடைந்தார்.

ஹம்ரோ கட்சி
கோர்கா கட்சியில் இருந்தவர் அஜோய். அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த நவம்பர் மாதம் ஹம்ரோ என்ற கட்சியை தொடங்கினார். இந்த நகராட்சி தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டனர். 32 வார்டுகளில் போட்டியிட்ட ஹம்ரோ கட்சியில், 19 பெண் வேட்பாளர்கள். மீதமுள்ளவர்கள், ஆசிரியர்கள், டூர் கெய்ட், ஆட்டோ டிரைவர்கள். இக்கட்சியின் தலைவர் அஜோய், டார்ஜிலிங்கில் சிறிய ஹோட்டல் நடத்தி வருகிறார். சாதாரண மக்களை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்து, பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.

பாஜக
டார்ஜிலிங் நகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2 இடங்களை மட்டுமே வென்றது. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் ஒரு நகராட்சியை வென்றன. டார்ஜிலிங்கில் தற்போது பாஜகவை சேர்ந்தவர்களே எம்.பி. ஆகவும் மற்றும் எம்.எல்.ஏ ஆகவும் உள்ளனர். இருந்தும் அக்கட்சியால் டார்ஜிலிங்கில் உள்ள 32 வார்டுகளில் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications