மிடில் ஆர்டரில் நடுக்கம்.. நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியில் மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படாத நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் புதிய அணி நியூசிலாந்துக்கு அணியின் இந்திய சுற்றுப்பயண தொடரில் அருமையான தொடக்கத்தை கொடுத்துள்ளது.

கடைசி கட்டத்தில் ரன்களை விரட்டிய போது சற்று தடுமாறினாலும் மொத்தத்தில் அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து மற்றும் சுழல்பந்து சிறப்பாக இருந்தபோதிலும் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோவர் மிடில் ஆர்டர் பகுதியில் இந்திய அணி பேட்டிங் தட்டுத் தடுமாறுவது ஒரே ஒரு பிரச்சினையாக உள்ளது. உலக கோப்பையிலும் இதே பிரச்சினை இருந்தது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதன் காரணமாக இன்று ராஞ்சியில் நடைபெறும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அணியில் மாற்றங்கள் வருமா என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் இது தொடர்பாக சில முன்னணி ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால் கடந்த போட்டியில் ஆடிய அதே வீரர்கள் இரண்டாவது போட்டியிலும் ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது என கூறப்பட்டு இருக்கிறது.

சமநிலை தேவை

சமநிலை தேவை

வீரர்களை மாற்றினால் அணி சமநிலையில் குழப்பம் ஏற்படும், முதல் போட்டியை போல, 2வது போட்டி செட் ஆகுமா என்பது தெரியாது. எனவே இந்த போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றி விட்டால் மூன்றாவது போட்டியில் விரும்பும் வகையில் அணியை மாற்றி அமைத்து பரீட்சாத்த முயற்சிகளில் ஈடுபடலாம் என்று அணி நிர்வாகம் கருதுகிறதாம்.

புத்துணர்ச்சி

புத்துணர்ச்சி

உலக கோப்பை தோல்விக்கு பிறகு, இந்த தொடர் வெற்றி இந்திய அணிக்கு புத்துணர்ச்சியை பாய்ச்ச வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் முதல் தொடரிலேயே கோப்பையை கைப்பற்றியதாக இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் நினைப்பதால், வீரர்களில் எந்த மாற்றமும் இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.

Recommended Video

    New Zealand T20 Series-ல் இருந்து Mohammed Siraj விலகல்?
    11 பேர் அணி

    11 பேர் அணி

    இதன்படி, ரோகித் சர்மா, ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேச அய்யர், அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் , புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், முகமது சிராஜ் ஆகியோர் கொண்ட 11 பேர் கொண்ட அணி இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்தை சந்திக்கும் என்றுதான், எதிர்பார்ப்பு இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+